'கண்ணும் கண்ணும்' கொள்ளையடித்தல் பட ஜோடிக்கு திருமணம்..! நடிகை கொண்டாடிய பேச்சிலர் பார்ட்டி போட்டோஸ்!
துல்கர் சல்மான், ரித்து சர்மா, தர்ஷன் உள்ளிட்டோர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த நிரஞ்சனிக்கும், இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இவர் பிரமாண்டமாக தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்' படத்தில் ரித்து வர்மாவிற்கு தோழியாகவும், தர்ஷனுக்கு காதலியாகவும் நடித்திருந்தனர் நிரஞ்சனி அகத்தியன்.
இந்த படத்தில் நடித்த போது நிரஞ்சனிக்கும், இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் இடையே மலர்ந்த காதல் தற்போது கல்யாணத்தில் முடிய உள்ளது.
இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், பிப்ரவரி 25 ஆம் தேதி இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது.
பாண்டிச்சேரியில் திருமணத்தை நடத்த காதல் ஜோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நிரஞ்சனி அவரது தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி வைத்துள்ளார்.
பொதுவாக ஆண்கள் தான் தங்களுடைய நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி அதிகம் வைப்பதாக கேள்வி பட்டிருப்போம், தற்போது அந்த ட்ரென்டையே மாற்றியுள்ளார் நிரஞ்சனி.
தோழிகள், நிரஞ்சனி அகத்தியரின் சகோதரிகள் கலந்து கொண்ட இந்த பேச்சிலர் பார்ட்டி புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
கருப்பு நிற உடையில் சும்மா தேவதை போல் இருக்கிறார் நிரஞ்சனி
கனி மற்றும் விஜய்யுடன் எப்படி அழகாக போஸ் கொடுக்குறார் பாருங்க
அக்கா விஜய்யுடன் கூடுதல் உச்சகம்
இன்னும் சில தினங்களே திருமணத்திற்கு உள்ள நிலையில்... இந்த புகைப்படத்தை விஜயலட்சுமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.