பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவர் இவரா? டபுள் மீனிங்கில் வார்த்தையை விட்டு சிக்கிய கமல்..!
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி இன்றுடன் ஒரு வாரம் முடிவடைகிறது. முதல் தலைவராக ரம்யா தேர்வு செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது தலைவராக யார் வருவார் என்கிற எதிர்பார்ப்பு பாக்கும் மக்களுக்கு அதிகமாகவே உள்ளது.
அதே நேரத்தில் எப்படி இந்த முறை தேர்வு செய்வார் பிக்பாஸ் என்கிற குழப்பமும் போட்டியாளர்கள் மனதில் இருந்தது.
இந்த குழப்பத்திற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாகவும், அடுத்த வாரத்தின் தலைவர் யார் என்பதை தெரிவிக்கும் விதமாகவும், தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.
இதில் தொகுப்பாளர் கமலஹாசன் இந்த முறை தலைவரை தேர்வு செய்வது ஜனநாயக முறைப்படி நடக்கிறது என கூறுகிறார்.
மேலும், ஷிவானி, சுரேஷ்,ரேகா என மூன்று வேட்பாளர்களை அறிவித்து, இவர்கள் மூவரின் பெயரையும் கூறி யாருடைய பெயருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதையும் பார்க்கிறார்.
ஷிவானியின் பெயரை கூறும் போது கையை தூக்காத பலர், சுரேஷ் பெயரை கூறும் போது கையை தூங்குகிறார்கள்.
இதற்க்கு கமல் நன்கு யோசித்து வாக்களியுங்கள், போட்டுவிட்டு பின்னர் யோசிக்க கூடாது என கூறி டபுள் மீனிங்கில் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம் என அவரே வாயை விட்டு சிக்கி கொள்கிறார்.
இன்றைய புரோமோவை வைத்து பார்க்கையில், வயதும், பக்குவமும் உள்ள சுரேஷ் தான் தலைவராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.