கணவர் கேட்டுக்கொண்டால் கண்டிப்பாக இதை செய்வேன்..! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த காஜல் அகர்வால்..!
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் இணைதளம் மூலமாக ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.
சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கணவர் உடன் புதிய வீட்டில் குடியேறியது முதல் மாலத்தீவில் ஹனிமூனை என்ஜாய் செய்தது வரை குதூகலமான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
மேலும்... குறையாத காதலுடன் அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை தலைதூக்கி உள்ளதால், பட ஷூட்டிங் பணிகள் இல்லாததால் காஜல் அகர்வால் அவருடைய கணவருடன்... ஓய்வு நாட்களை கழித்து வருகிறார்.
இந்நிலையி இவர் சமீபத்தில் இணையதம் மூலமாக ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் சினிமாவில் இருந்து விளக்குவீர்களா? என்பது போல் கேள்வி எழுப்பினார்.
இதற்க்கு பதிலளித்த, காஜல் அகர்வால் நான் திரைப்படத்தில் நடிப்பதற்கு என்னுடைய ஒட்டு மொத்த குடும்பமும் உறுதுணையாக உள்ளனர். ஒருவேளை என்னுடைய கணவர் கேட்டுக்கொண்டால் திரையுலகை விட்டு விலகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.
அதே என்றதில் அப்போது என்னுடைய கையில் மீதம் உள்ள படங்களை மட்டுமே நடிப்பேன் தவிர புதிய படங்களை ஒப்புக்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.