MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • K.Rajan: தயாரிப்பாளர் கே.ராஜனின் இறுதி நாட்கள்! கார் ஓட்டுநரிடம் தயாரிப்பாளர் கே.ராஜன் சொன்ன கடைசி வார்த்தை!

K.Rajan: தயாரிப்பாளர் கே.ராஜனின் இறுதி நாட்கள்! கார் ஓட்டுநரிடம் தயாரிப்பாளர் கே.ராஜன் சொன்ன கடைசி வார்த்தை!

Producer K Rajan Final Days: மூத்த தயாரிப்பாளர் கே.ராஜனின் கடைசி நாட்கள் மயான அமைதியுடன் இருந்துள்ளது. தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்ந்ததற்கு என்ன காரணம் தெரியுமா?

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 18 2026, 09:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சிங்கம் போல கர்ஜித்த மனிதர்
Image Credit : x

சிங்கம் போல கர்ஜித்த மனிதர்

தமிழ் திரையுலகில் யாருக்கும் அஞ்சாமல், மேடைகளில் உண்மைகளை நெத்தியடியாகப் பேசி வந்த மூத்த தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. ராஜன் (85), சென்னை அடையாறு ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துகொண்டுள்ளார்.  இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

85 வயதிலும் எத்தனையோ மேடைகளில் சிங்கம் போல கர்ஜித்த ஒரு மனிதர், வாழ்க்கையின் இறுதிப் பக்கங்களில் சந்தித்த வலிகள் என்ன? அந்த விபரீத ஞாயிறு காலை, கார் ஓட்டுநரிடம் அவர் கடைசியாகப் பேசிய வார்த்தைகள் என்ன? போலீஸ் விசாரணையில் வெளிவந்துள்ள அதிர வைக்கும் தகவல்கள் இதோ.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
மௌனம் சூழ்ந்த கே.ராஜனின் இறுதி நாட்கள்!
Image Credit : our own

மௌனம் சூழ்ந்த கே.ராஜனின் இறுதி நாட்கள்!

பொதுவாகவே, சென்னையில் எங்கு சினிமா விழாக்கள் நடந்தாலும் அங்கே கே. ராஜனின் குரல் நிச்சயம் ஒலிக்கும். தயாரிப்பாளர்களின் நஷ்டங்கள் குறித்தும், நடிகர்களின் அநியாய சம்பளம் குறித்தும் வெளுத்து வாங்குவது அவரது வழக்கம். ஆனால், அவரது இறுதி நாட்கள் முற்றிலும் தலைகீழாக இருந்திருக்கின்றன.

2 மாத கால தனிமை: கடந்த இரண்டு மாதங்களாக கே. ராஜன் எந்தவொரு சினிமா நிகழ்ச்சிகளிலும், சங்கக் கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. எப்போதும் பரபரப்பாக இருக்கும் அவர், திடீரென உலகத்தோடு இருந்த தொடர்பைத் துண்டித்துக் கொண்டுள்ளார்.

குடும்பத்தை பிரிந்து ஹோட்டலில் வசிப்பு: கடந்த சில காலமாகவே குடும்பத்தினருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் மற்றும் மனஸ்தாபங்கள் காரணமாக, அவர் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.

85 வயதான ஒரு மூத்த ஆளுமை, புகழின் உச்சத்தில் இருந்தும், இறுதி நாட்களில் எந்தவொரு சினிமா துணையும் இன்றி, குடும்பத்தின் ஆதரவும் இன்றி கடுமையான மன அழுத்தத்திலும், தனிமையிலும் வாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Articles

Related image1
Now Playing
Cinema Secret: செட் போடாமல் நடந்த சூட்டிங்.. ஸ்பாட்டிலேயே ஆடிய டான்ஸ்.. 'முட்ட கலக்கி' சுவாரஸ்யங்கள்
Related image2
cinema cut outs | விண்ணை தொடும் கட்அவுட் யாரு வச்சிருக்கா தெரியுமா? விஜய், அஜித்தை மிஞ்சிய கன்னட ஹீரோ!
33
கார் ஓட்டுநரிடம் சொன்ன ‘அந்த’ கடைசி வார்த்தை!
Image Credit : our own

கார் ஓட்டுநரிடம் சொன்ன ‘அந்த’ கடைசி வார்த்தை!

அந்தத் துயரமான ஞாயிற்றுக்கிழமை காலை, வழக்கம்போல வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கார் ஓட்டுநருடன் கே. ராஜன் கிளம்பியுள்ளார். அப்போது அவர் வழக்கத்திற்கு மாறாக மிகவும் அமைதியாகவும், ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையிலும் இருந்ததாக ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கார் சென்னை அடையாறு ஆற்றங்கரைப் பாலத்தின் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரிடம், “காரை ஓரமா நிறுத்துப்பா... எனக்கு மனசு ஒரு மாதிரியா இருக்கு. கொஞ்ச நேரம் காலாற நடந்துட்டு (நடைபயிற்சி) வரேன்...” என்று கூறியுள்ளார். இதுதான் கே. ராஜன் தனது கார் ஓட்டுநரிடம் பேசிய கடைசி வார்த்தைகள்!

ஓட்டுநரும் காலையில் லேசான நடைபயிற்சி மேற்கொள்ளத்தான் செல்கிறார் என்று நினைத்து காரை நிறுத்தியுள்ளார். ஆனால், காரை விட்டு இறங்கி பாலத்தின் மீது விறுவிறுவென நடந்த கே. ராஜன், யாரும் எதிர்பாராத விதமாக அடுத்த சில நொடிகளில் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்துள்ளார். ஓட்டுநர் பதறிப்போய் அலறுவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

மீட்கப்பட்ட சடலம்: அதிர்ச்சியில் போலீசார் பொதுமக்கள் மற்றும் ஓட்டுநரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு மற்றும் சைதாப்பேட்டை தீயணைப்புத் துறையினர் ஆற்றில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு கே. ராஜனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அவர் ஏதேனும் கடிதம் (Suicide Note) எழுதி வைத்துள்ளாரா அல்லது யாருக்கேனும் போன் செய்து பேசினாரா என்ற கோணத்தில் அடையாறு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஓயாத போராளியின் சோக முடிவு

 1983-ல் 'பிரம்மச்சாரிகள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி, 'நம்ம ஊரு மாரியம்மா' போன்ற படங்களை இயக்கி, விநியோகஸ்தர் சங்கத் தலைவராகவும் சாதித்த ஒரு சினிமா போராளியின் இந்த முடிவு தமிழ் திரையுலகை உறைந்து போகச் செய்துள்ளது. எத்தனையோ தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்காக மேடைகளில் சண்டை போட்ட கே. ராஜன், தனது இறுதி நாட்களின் தனிமையை வெல்ல முடியாமல் போனதுதான் தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் சோகம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image2
Songs: கொட்டபாக்கும் கொழுந்து வெத்தலையும்.! முப்பது ஆண்டுகளை கடந்தும் நாட்டாமை இசை மனதை மயக்குவது ஏன்?
Recommended image3
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Related Stories
Recommended image1
Now Playing
Cinema Secret: செட் போடாமல் நடந்த சூட்டிங்.. ஸ்பாட்டிலேயே ஆடிய டான்ஸ்.. 'முட்ட கலக்கி' சுவாரஸ்யங்கள்
Recommended image2
cinema cut outs | விண்ணை தொடும் கட்அவுட் யாரு வச்சிருக்கா தெரியுமா? விஜய், அஜித்தை மிஞ்சிய கன்னட ஹீரோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved