MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மடக்கிய பாலசந்தர்.. சம்பவம் செய்த கண்ணதாசன்.. மேடையிலேயே பாடல் உருவான கதை

மடக்கிய பாலசந்தர்.. சம்பவம் செய்த கண்ணதாசன்.. மேடையிலேயே பாடல் உருவான கதை

தன் படத்துக்கு பாடல் எழுதாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருந்த கண்ணதாசனை கே.பாலசந்தர் மேடையிலே மடக்கி, பாடல் எழுத வைத்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
| Updated : May 27 2025, 01:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
‘அவர்கள்’ திரைப்படம்
Image Credit : GOOGLE

‘அவர்கள்’ திரைப்படம்

1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் தான் இயக்கிக் கொண்டிருந்த ‘அவர்கள்’ படத்திற்கு பாடல்கள் எழுதுவதற்காக கண்ணதாசனை அணுகியுள்ளார். கண்ணதாசன் முதல் பாடலாக ‘காற்றுக்கென்ன வேலி’, ‘இருமனம் கொண்ட’ என்ற இரண்டு பாடல்களையும் எழுதி முடித்து அதற்கு எம்.எஸ்.வி இசையும் அமைத்து முடித்து விட்டார். அடுத்த பாடலை எழுதுவதற்குள் கண்ணதாசன் பிஸியாக விட்டார்.

26
திட்டம் தீட்டிய கே.பாலசந்தர்
Image Credit : GOOGLE

திட்டம் தீட்டிய கே.பாலசந்தர்

அப்போது சினிமா பத்திரிக்கை விருது வழங்கும் விழா ஒன்று நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியிலேயே கண்ணதாசனின் பிறந்தநாளையும் கொண்டாட விழாக்குழுவினர் திட்டமிடுகின்றனர். இந்த விழாவிற்கு வரும் கண்ணதாசனை மேடையிலேயே பாடல் எழுத வைத்துவிட வேண்டும் என கே.பாலச்சந்தர் திட்டம் தீட்டுகிறார். அதற்காக கண்ணதாசன் மேடையில் வைத்து பாடல் எழுதப் போகிறார் என விளம்பரமும் செய்யப்படுகிறது.

Related Articles

Related image1
நான்கு வரிகளில் மஹாபாரதத்தை சொல்ல முடியுமா? சவாலை ஏற்று மெகா ஹிட் பாடலை உருவாக்கிய கண்ணதாசன்!
Related image2
எம்.ஜி.ஆரை முதல் முறையாக கண் கலங்கி அழ வைத்த கண்ணதாசன் பாடல்! எது தெரியுமா?
36
அதிர்ச்சியில் உறைந்த கண்ணதாசன்
Image Credit : our own

அதிர்ச்சியில் உறைந்த கண்ணதாசன்

இந்த விவரம் எதுவும் தெரியாத கண்ணதாசன் பிறந்த நாள் விழாவிற்கு வருகை தருகிறார். அப்போது பாலச்சந்தர் மேடையில் வைத்து பாடல் உருவாகப் போகிற விஷயத்தை கூற, கண்ணதாசன் அதிர்ச்சியில் உறைகிறார். கண்ணதாசன் எப்படி பாட்டு எழுதுகிறார்? எப்படி இசை அமைக்கிறார்கள்? என்பதை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் கூடியிருந்தனர். எனவே கண்ணதாசனும் மேடையிலேயே பாடல் எழுத ஒப்புக்கொள்கிறார்.

46
பாடலின் சூழலை சொன்ன பாலசந்தர்
Image Credit : GOOGLE

பாடலின் சூழலை சொன்ன பாலசந்தர்

கே.பாலச்சந்தர் பாடலின் சூழலைச் சொல்ல ஆரம்பிக்கிறார். சுஜாதாவின் முதல் காதல் தோல்வியில் முடிய, ரஜினியை கணவராக ஏற்கிறார். ரஜினி கொடுமைப்படுத்தவே அவரைப் பிரிந்து சென்னைக்கு வந்து வேலை பார்க்கிறார். அங்கு கமல் சுஜாதாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ரஜினியும், மனம் திருந்தி சுஜாதாவை பார்க்க சென்னைக்கு வருகிறார். சுஜாதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மூன்று பேரும் அவரை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கிறார்கள்.

56
மேடையிலேயே பாடலை எழுதி முடித்த கண்ணதாசன்
Image Credit : GOOGLE

மேடையிலேயே பாடலை எழுதி முடித்த கண்ணதாசன்

ஒரு புறம் முன்னாள் காதலன், மற்றொரு புறம் முன்னாள் கணவன், இன்னொரு பக்கம் தன்னை மனைவி போல் கருதும் நண்பன் என தன்னுடைய எதிர்காலம் யாருடன் என்பது புரியாமல் சுஜாதா குழம்பி நிற்கிறாள். இதுதான் சுச்சுவேஷன் என பாலச்சந்தர் கூறி முடிக்க, இதற்கு எப்படி உடனடியாக பாடல் எழுத முடியும் என மக்கள் சந்தேகத்துடன் அமர்ந்திருக்க, கண்ணதாசன் உடனடியாக பல்லவியை எழுதத் துவங்ககிறார். “அங்கும், இங்கும் பாதை உண்டு. இன்று நீ எந்தப் பக்கம்? ஞாயிறு உண்டு, திங்கள் உண்டு, எந்த நாள் இந்த நாளோ?” என கண்ணதாசன் எழுதத் தொடங்கியதும் அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது.

66
மூன்று சரணங்களுடன் சூப்பர் ஹிட் பாடல்
Image Credit : GOOGLE

மூன்று சரணங்களுடன் சூப்பர் ஹிட் பாடல்

பாடலுக்கு மூன்று சரணம் வேண்டுமென பாலச்சந்தர் கேட்க, அதையும் கண்ணதாசன் சளைக்காமல் எழுதி முடித்தார். இந்த தகவலை கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை பேட்டி ஒன்றில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Related Stories
Recommended image1
நான்கு வரிகளில் மஹாபாரதத்தை சொல்ல முடியுமா? சவாலை ஏற்று மெகா ஹிட் பாடலை உருவாக்கிய கண்ணதாசன்!
Recommended image2
எம்.ஜி.ஆரை முதல் முறையாக கண் கலங்கி அழ வைத்த கண்ணதாசன் பாடல்! எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved