MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என் மகளை அடி வெளுத்து விடுவான் மாதம்பட்டி ரங்கராஜ்! காது கேட்காம போயிடுச்சு: குமுறும் ஜாய் கிரிசில்டாவின் அம்மா!

என் மகளை அடி வெளுத்து விடுவான் மாதம்பட்டி ரங்கராஜ்! காது கேட்காம போயிடுச்சு: குமுறும் ஜாய் கிரிசில்டாவின் அம்மா!

Joy Crizildaa Mother Tearful Talk about Madhampatty Rangaraj : என்னுடைய மகளை அடி வெளுத்துவிடுவான் என்றும் அவருக்கு முகம் வீங்கி காது கேட்காமல் போய்விட்டது என்றும் ஜாய் கிரிசில்டாவின் அம்மா மன வேதனையுடன் கூறியுள்ளார்.

3 Min read
Rsiva kumar
Published : Sep 11 2025, 06:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
என் மகளை அடி வெளுத்து விடுவான் மாதம்பட்டி ரங்கராஜ்
Image Credit : Asianet News

என் மகளை அடி வெளுத்து விடுவான் மாதம்பட்டி ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜின் 2ஆவது மனைவியான ஜாய் கிரிசில்டா தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே முதல் மனைவி இருக்கும் போது மாதம்பட்டி ரங்கராஜை ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

முதல் பொண்டாட்டி ஏன் வாயே திறக்கல, என் மாமியார் என்ன வாழ்த்துனாங்க – ஜாய் கிரிசில்டாவின் முதல் பேட்டி!

27
ஜாய் கிரிசில்டா
Image Credit : Asianet News

ஜாய் கிரிசில்டா

திருமணத்தின் போது ஜாய் கிரிசில்டா 6 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து ஜாய் கிரிசில்டா தனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தள பக்கங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஆனால், இந்த திருமணம் தொடர்பாகவே, ஜாய் கிரிசில்டா பற்றியோ மாதம்பட்டி ரங்கராஜ் இதுவரையில் ஒரு முறை கூட வாய் திறந்து பேசவில்லை.

37
ஜாய் கிரிசில்டாவின் அம்மா
Image Credit : Asianet News

ஜாய் கிரிசில்டாவின் அம்மா

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாய் கிரிசில்டா சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ரங்கராஜ் தான் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார். ஆனால் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளதாக கூறினார்.

47
குக் வித் கோமாளி சீசன் 6 மாதம்பட்டி ரங்கராஜ்
Image Credit : JioHotstar/Screenshot

குக் வித் கோமாளி சீசன் 6 மாதம்பட்டி ரங்கராஜ்

இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்-தான் தந்தை, தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும். மாதம்பட்டி ரங்கராஜை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியதாக தெரிவித்தார். மேலும் கருவை கலைக்கும் படி வற்பறுத்தி அடித்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னை சந்திக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

57
மாதம்பட்டி ரங்கராஜ் கொடுமைக்காரன்
Image Credit : x/joy_stylist

மாதம்பட்டி ரங்கராஜ் கொடுமைக்காரன்

அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும் போது தனது மனைவியை விட்டு பிரிந்து இருப்பதாக தெரிவித்ததால் தான் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் சற்று சைலண்டாக இருந்த ஜாய் கிரிசில்டா தனது மன வேதனையை வெளிப்படுத்து விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: "பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்." தர்மம் ஜெயிக்கும் என்று பதிவிட்டிருந்தார்.

முதலிரவுக்கு ஏற்பாடு செய்த ரேவதி – கார்த்திக்கிற்கு காதல் வலை – கார்த்திகை தீபம் 2 இன்றைய அப்டேட்!

67
ஸ்ருதி பிரியா, ஜாய் கிரிசில்டா
Image Credit : x/joy_stylist

ஸ்ருதி பிரியா, ஜாய் கிரிசில்டா

இந்த நிலையில் முதல் முறையாக அவர் சிவசங்கரி டாக்ஸிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜிற்கும் திருமணம் நடந்தது அவரது முதல் மனைவியான ஸ்ருதி பிரியாவிற்கு நன்கு தெரியும். அவருக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. நாங்கள் இருவரும் ஒன்றரை வருடங்களாக இருந்து வரும் நிலையில் ஏன் அவர் எந்த பிரச்சனையும் செய்யவில்லை. அவர் மட்டும் பிரச்சனை செய்திருந்தால் இன்று என்னுடைய வாழ்க்கை இவ்வளவு பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் பதில் சொல்லுவாங்க, ஸ்ருதி பிரியா பதில் சொல்லுவாங்களா? என்றெல்லாம் சரிமாரியாக கேள்விகள் எழுப்பி தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்தார்.

77
ஜாய் கிரிசில்டாவின் அம்மா பேட்டி
Image Credit : X

ஜாய் கிரிசில்டாவின் அம்மா பேட்டி

இந்த நிலையில் தான் இப்போது ஜாய் கிரிசில்டாவிற்கு பதிலாக அவரது அம்மா பேசியிருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய மகளை அடி வெளுத்துவிடுவான் என்றும் அவருக்கு முகம் வீங்கி காது கேட்காமல் போய்விட்டது என்றும் ஜாய் கிரிசில்டாவின் அம்மா மன வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், ஒருநாள் கூட நான் அடித்தது இல்லை. ஆனால், அவன் என்னுடைய மகளை அடித்து துன்புறுத்தியிருக்கிறான். மேலும், குழந்தை கருவை கலைக்க சொல்லி அடிச்சு கொடுமைப்படுத்தியிருக்கான் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
தமிழ் சினிமா
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved