கோவையில் பெண்கள் பள்ளி எதிரே “இரண்டாம் குத்து” போஸ்டர்... ஆவேசமடைந்த நகைத்தொழிலாளி...!
சோசியல் மீடியாவில் இந்த படத்தின் டீசரைப் பார்த்து கழுவி ஊத்ததவர்களே இல்லை எனும் அளவிற்கு தாறுமாக கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத படக்குழு இரண்டாம் குத்து எனும் ஆபாச படத்தின் போஸ்டரை ஊரெல்லாம் ஒட்டும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் இப்படியொரு ஆபாசமா? என காண்போர் வெட்கி கூசும் வகையில் “இரண்டாம் குத்து” என்ற அடல்ட் படம் தயாராகியுள்ளது. வக்கிரத்தின் உச்சமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது.
இரட்டை அர்த்த வசனங்கள், படுக்கை அறை காட்சிகள், முத்தக்காட்சிகள் என கிட்டதட்ட பிட்டு படங்களை மிஞ்சும் அளவிற்கு வெளியாகியுள்ள டீசரைக் கண்டு தமிழ் திரையுலகினர் கொதித்து போயுள்ளனர்.
இந்த மாதிரியான கேவலமான படங்கள் குழந்தைகளின் மனதில் விஷத்தை கலக்கும் என்பதால் “இரண்டாம் குத்து” படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சோசியல் மீடியாவில் இந்த படத்தின் டீசரைப் பார்த்து கழுவி ஊத்ததவர்களே இல்லை எனும் அளவிற்கு தாறுமாக கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத படக்குழு இரண்டாம் குத்து எனும் ஆபாச படத்தின் போஸ்டரை ஊரெல்லாம் ஒட்டும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில் கோவை தேர்முட்டி பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள சுவற்றில் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இதைப்பார்த்து கொதித்துப்போன தினேஷ் என்ற நகைக்கடை தொழிலாளி, ஆபாசம் நிறந்த அந்த போஸ்டரை கிழித்து எரிந்தார்.
வக்கிரத்தின் உச்சமாக வெளிவந்துள்ள இந்த படத்தை தடை செய்ய வேண்டுமென பல்வேறு சமூக அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்த சமயத்தில் பெண் பிள்ளைகள் அதிகம் படிக்கும் பள்ளி முன்பு இப்படியொரு கேவலமான போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.