ஜெய்பீம் செங்கேணியா இது..! லிஜிமோல் ஜோஸ் கணவரை பார்த்து இருக்கீங்களா.? வைரல் போட்டோஸ்
மலையாள திரைப்படங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர் லிஜிமோல் ஜோஸ்.
2016 ஆம் ஆண்டு மஹேஷிண்டே பிரதிகாரம் மற்றும் கட்டப்பனையிலே ரிதவிக் ரோஷன் என்ற இரு திரைப்படங்களில் நடித்து மலையாள திரையுலகில் அறிமுகமானார்.
இவர் தமிழில் 2019 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் திரைப்படத்தினை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார், சித்தார்த் நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
லிஜோமோல் தனது பட்டபடிப்பினை முடித்த பின்னர் ஜெய் ஹிந்த் தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் தான் படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதுவரை இவர் தீதும் நன்றும் மற்றும் ஜெய் பீம் படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடிகர் சூர்யாவுடன் நடித்த ஜெய் பீம் படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது.
ஜெய் பீம் படத்தில் ராசாக்கண்ணு மனைவி கதாபாத்திரமான செங்கேணியாக நடித்திருப்பார்.இவர் தனது நீண்டகால நண்பரான அருண் என்பவரை கேரளாவின் வயநாட்டில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார்.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..ரெட் ஜெயண்ட்.! 100 கோடி பட்ஜெட்! திடீரென திமுக பக்கம் ரூட்டை மாற்றிய காயத்ரி ரகுராம் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே