படப்பிடிப்பின் போது விபத்து... எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய பிரபல நடிகர்... காத்திருந்த அதிர்ச்சி...!
ஏதோ ஒரு சக்தி தான் தன்னை அதிலிருந்து விடுவித்ததாகவும், உடனே நான் தானாக மேலே மிதந்ததாகவும் கூறி படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஜாக்கி சான் நடிக்கும் வேன்கார்டு என்ற ஆங்கில படத்தின் படப்பிடிப்பு சீனாவில் நடைபெற்று வருகிறது. அப்போது காட்டாற்று வெள்ளத்தில் ஜாக்கி சான் மற்றும் நடிகை மியா முகி இருவரும் நீர் ஸ்கூட்டரில் பயணிப்பது போன்ற சாகசக் காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக நீர் ஸ்கூட்டர் பாறையில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விட்டதால் ஜாக்கி சானும் மியாவும் வெள்ளத்தில் மூழ்கினர்.
இதனால் பதறிய படக்குழுவினரும், பாதுகாவலர்களும் ஜாக்கி சானை தேடும் பணியில் இறங்கினார். சுமார் 47 விநாடிகள் ஜாக்கி சான் வெளியே வராததால் பதற்றம் நிலவியது.
பின்னர் ஜாக்கிசான் அவராகவே நீருக்கு மேல் வந்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்து அவர், படகுடன் தான் இணைக்கப்பட்டிருந்தால் வெளியே வர முடியவில்லை என்றும், ஏதோ ஒரு சக்தி தான் தன்னை அதிலிருந்து விடுவித்ததாகவும், உடனே நான் தானாக மேலே மிதந்ததாகவும் கூறி படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இவ்வளவு களோபரங்கள் நடந்ததால் தயாரிப்பாளர் படப்பிடிப்பை ரத்து செய்ய கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் ஜாக்கி சானோ, அரை மணி நேர ஓய்விற்கு பிறகு மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த விபத்து தொடர்பான போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.