MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்காததற்கு இது தான் காரணமா? செல்போனில் இருந்தது என்ன? அதிரடி காட்டும் NCB ..!

ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்காததற்கு இது தான் காரணமா? செல்போனில் இருந்தது என்ன? அதிரடி காட்டும் NCB ..!

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்தியதாக பாலிவுட் கிங்காங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கானின் (Shah rukh khan) மகன் ஆர்யன் கான் (Aryan Khan) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவருக்கு ஜாமீன் (bail) மறுக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. 

1 Min read
manimegalai a
Published : Oct 06 2021, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஷாருகானின் மகன் ஆர்யன் கான் தினமும் போதைப்பொருட்களை ஆர்டர் செய்து வாங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் ஆர்யன் கான் கைதுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

24

இந்தநிலையில் ஷாருக்கானின் மகன் உட்பட 8 பேர் தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஆர்யன் கானின் தரப்பில் இருந்து, அவருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவித்ததோடு மட்டும் இன்றி, வரும் 7 ஆம் தேதி வரை NCB காவல் நீடிக்கப்பட்டுள்ளது நீதிமன்றம்.

 

34

மும்பை நீதிமன்றத்தில் ஆர்யன் கானை ஆஜர்படுத்திய போது, அவரது செல்போனை NCB அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் ரகசிய வார்த்தைகள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், இதனால் ஆர்யன் கானுக்கு சர்வதேச அளவில், போதை கும்பலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததன் காரணமாகவே...  இவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதோடு, வரும் 7 ஆம் தேதி வரை காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவித்துள்ளது.

 

44

போதை மருந்து கைப்பற்ற பட்ட கப்பலின் உரிமையாளருக்கும் இரண்டாவது முறையாக தற்போது சம்மன் அனுப்பப்பட்டுளள்து. மேலும் கப்பலுக்கு போதை பொருள் எப்படி வந்தது? சப்பிலே செய்தது யார் என்று? பல்வேறு கோணங்களில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved