அடுத்த விவாகரத்து..? கணவரை பிரிந்த ‘சரணவனன் மீனாட்சி’ ரக்ஷிதா..
சரணவனன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான ரக்ஷிதா கடந்த ஒருவருடமாக கணவரை பிரிந்து வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது..

Rachitha
ரக்ஷிதா முதல் முறையாக கடத்த 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான, பிரிவோம் சந்தோப்போம் தொடர் மூலம் அறிமுகமானார்.
Rachitha
இந்த தொடரில் இவரது கணவரும் நடித்திருந்தார். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் திருமணத்திலும் முடிந்தது.
Rachitha
திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களில் நடித்து அசத்தி வரும் இவர், 10 க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்திருந்தாலும், இவரது சீரியல் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது 'சரவணன் மீனாட்சி' தொடர்தான்.
rachitha
இந்த தொடரில் அடுத்தடுத்து பல ஹீரோக்கள் மாறினாலும், ஒரே ஹீரோயினாக நிலைத்து நின்று, சீரியலை முடித்து விட்டு வெளியேறினார்.
rachitha
இந்த சீரியல் மூலம் கிடைத்த பிரபலம், இவருக்கு திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது. அந்த வகையில் இயக்குனர் ராதா மோகன் இயக்கிய 'உப்புக்கருவாடு' படத்தில் கருணாகரனும் ஜோடியாக நடித்தார்.
rachitha
இந்த படத்தை தொடர்ந்து மற்ற படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கலக்கி வந்தார்..
rachitha
சமீபத்தில் இந்த தொடரில் ரக்ஷிதா விலகிவிட்டார். தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இது சொல்ல மறந்த கதை என்ற புது சீரியலில் நடித்து இருக்கிறார். கூடிய விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கிடையே ரக்ஷிதா தன்னுடைய கணவரை ஒருவருடமாக பிரிந்து வாழ்வதாக தகவல் கசிந்துள்ளது..
rachitha
கணவன் மனைவி இரண்டு பேரும் ஒரே துறையில் இருக்கும் போது சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வருவது வழக்கம். அந்த மாதிரி இவர்கள் இடையில் வந்திருக்கலாம். இதன்காரணமாக பிரியும் முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது..