இரண்டாம் உலகம் படத்தில் முதலில் ஆர்யா - அனுஷ்காவுக்கு பதில் நடிக்க இருந்தது இவர்கள் தான்..!
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இரண்டாம் உலகம்'.
ரொமான்டிக், பேண்டசி ஆக்ஷன் படமாக உருவான இந்த படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாகவும், அனுஷ்கா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர்.
எப்போதும் வித்தியாசமான கதைகள் மூலம், மக்கள் மனதில் பதிந்த இயக்குனர் செல்வராகவன்... இந்த படத்தையும் யூகிக்க முடியாத ஒரு கற்பனை கதையை கண் முன் காட்டியிருந்தார்.
இந்நிலையில் இந்த படம் குறித்து, இதுவரை வெளியாகாத ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்த படத்தில் முதலில் நடிகர் தனுஷ் தான் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி, சில காட்சிகளிலும் நடித்தாராம்.
அதே போல் அனுஷ்கா ஷெட்டிக்கு பதில், நடிகை ஆண்ரியா தான் ஹீரோயினாக நடித்தாராம்.
ஒரு சில பிரச்சனைகளால் இருவரும் இந்த படத்தில் இருந்து விலக, பின்னர் தான் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடித்தனர்.
இந்த படம், வசூல் ரீதியா பெரிய வெற்றியை பெற வில்லை என்றாலும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.