உன் அருவெறுப்பிற்கு விளக்கம் வேறயா?... ஆபாச பட இயக்குநரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்...!
மேலும் ஆபாசத்திற்கும், கவர்ச்சிக்கும் வித்தியாசம் இல்லையா? என சந்தோஷிற்கு நெட்டிசன்கள் பலரும் நெத்தியடி கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் அடல்ட் படமான ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இந்த படத்தில் புதுமுக நடிகை, அக்ரிதி சிங், மீனெல் ஷா, என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் மொட்டை ராஜேந்திரன், பிக்பாஸ் டேனியல், ரவி மரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசருக்கு கடும் கண்டனங்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவரும், பிரபல இயக்குநருமான பாராதிராஜா காரசாரமான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
“"இரண்டாம் குத்து" என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்??எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது... நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலை கொள்கிறேன்.
இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா?
அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன்.
இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப் பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன்.
சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்.. எத்தனை கற்பழிப்புகள்...?குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்துகொள்ளுங்கள்” என காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.
தற்போது பாரதிராஜாவின் கண்டன அறிக்கைக்கு இரண்டாம் குத்து பட இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த பதிவில் 1981ம் ஆண்டு உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் பாரதிராஜா இயக்கிய “டிக் டிக் டிக்” பட போஸ்டரை பதிவிட்டுள்ளார். அதில் மாதவி, ராதா உட்பட 3 நடிகைகள் நீச்சல் உடையில் கமலுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் “டி க் டிக் டிக்” கூசாத கண்ணு இப்ப கூசிருச்சோ” என பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் ஜாம்பான் இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவுக்கு இப்படி மட்டமான விதத்தில் பதிலளித்த சந்தோஷ் ஜெயக்குமாருக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. மேலும் ஆபாசத்திற்கும், கவர்ச்சிக்கும் வித்தியாசம் இல்லையா? என சந்தோஷிற்கு நெட்டிசன்கள் பலரும் நெத்தியடி கமெண்ட் செய்து வருகின்றனர்.