எம்.ஜி.ஆர் மடியில் ஜம்முனு அமர்ந்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா?
எம்.ஜி.ஆர் மடியில் ஜம்முனு அமர்ந்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா?
மற்ற மொழிகளில் வாரிசு நடிகர்களை உடனடியாக ரசிகர்கள் ஏற்று கொண்டாலும், தமிழ் திரையுலகை பொறுத்தவரை, திறமையை நிரூபிப்பவரை மட்டுமே, ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
அந்த வகையில், முறை மாப்பிள்ளை என்கிற படத்தின் மூலம், கதாநாயகனாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்றவர் தான் அருண் விஜய். எம்.ஜி.ஆர். மடியில் ஜம்முனு அமர்ந்திருக்கும் நடிகரும் அவர் தான்.
இவரின் திரைப்பயணம் வெற்றிகரமாக துவங்கினாலும், அது நீடிக்க வில்லை, இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்விகளை தழுவியது. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளே இல்லாத நடிகராகவும் இவரை மாற்றியது.
ஆனால் விடா முயற்சியோடு வருஷத்தில் ஒரு படமாவது நடித்து விடுவார். இவர் நடிப்பில் படங்கள் வெளிவராத வருடங்களும் உள்ளது.
இந்நிலையில் இவரை மிகவும் வித்தியாச படுத்திகாட்டிய திரைப்படம் என்றால் அது மலை மலை, இதுவரை பார்த்திடாத அருண் விஜய்யை இந்த படம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
மேலும் அருண் விஜய் நடிப்பில் வெளியான, பாண்டவர் பூமி, இயற்கை போன்ற படங்கள் வெற்றி பெற்றாலும் இவருக்கு தனி நடிகர் என்கிற அங்கீகாரம் மட்டும் கிடைக்கவில்லை.
கிட்ட தட்ட 15 வருடங்களுக்கு பின் இவர் காத்திருந்த வெற்றி இவருக்கு கிடைத்தது. தல அஜித்துடன் நடிகர் அருண் விஜய் இணைந்து நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்படம் அவருடைய வாழ்க்கையையே மாற்றியது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும், ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து, ஸ்கோர் செய்தார்.
அதன் பின்னர் ஹீரோவாக நடித்த படங்களில், சம்பளத்தை கூட குறைத்து கொண்டு, கதையில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து வெளியான ’குற்றம் 23’ திரைப்படம் இவருக்கு மிகப்பெறிய வெற்றி படமாக அமைந்தது.
பின் அருண்விஜய் நடிப்பில் வெளியான, செக்க சிவந்த வானம்’ , 'தடம்', 'மாஃபியா' உள்ளிட்ட படங்கள் இவரை சூப்பர் ஹிட் ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களை பார்க்க வைத்தது.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் அருண் விஜய், 2020 ஆண்டில் மட்டும் 6 படங்களை தன் கை வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.