பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் கமலே சொல்லிட்டாரு..! ரேகா - சனத்திற்கு மீன் கதை?
அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையுடன் 2 வாரத்தை எட்டுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற டிக்கெட் ஃப்ரீ டாஸ்கின் போது சுரேஷ் கூறினார். இதற்க்கு ரியோ உள்ளிட்ட சில போட்டியாளர்கள், அவர் மீது கோவத்தை காட்டினர்.
bb tamil
பிக்பாஸ் தன்னுடைய வேலையை காட்டும் விதத்தில், இந்த வீடியோவை வெளியிட்டு சுரேஷுக்கே ஷாக் கொடுத்தார். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில், சுரேஷை ஹீரோ என அவரை தூக்கி பிடித்த கமல், இரண்டாவது புரோமோவில் சுரேஷ் கூறிய குரூப்பிஸம் பிக்பாஸ் வீட்டில் உள்ளதை உறுதி செய்துள்ளார்.
இன்றைய முதல் புரமோவில் அட்டகாசமான கெட்டப் உடன் தோன்றிய கமல்ஹாசன், ’ஆளாளுக்கு ஒரு குரூப்பில் சேர்த்துக் கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உருவாகி இருக்கின்றது.
இந்த 16 போட்டியாளர்களை சேர சோழ பாண்டியர்கள் என்று பிரித்தோம் என்றால் அதில் ரேகா மற்றும் சனம் ஆகிய இருவரையும் பாண்டியன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் மீன் கொடியை அப்படி தூக்கிப் பிடிக்கிறார்கள். பாண்டியர்கள் கொடியிலும் இரண்டு மீன்கள் இருக்கும்’ என்று கூறி ட்விஸ்ட் வைத்துள்ளார்.
மொத்தத்தில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளதை கமல்ஹாசன் ஒப்புக்கொண்ட நிலையில், இந்த மீன் கதை கூற காரணம் என்ன என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.