பெண்கள் திறமையானவர்கள்.. வெறும் உடம்பு மட்டும் தானா? ஏடாகூட யூட்யூபரை போட்டு பொளந்த நடிகை
சென்னையில் நடைபெற்ற சினிமா புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, பாடி ஷேமிங் செய்த யூடியூபருக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் நடிகை கௌரி ஜி கிஷன்.

Gouri Kishan Befitting Reply to youtuber
கௌரியின் புதிய படமான 'அதர்ஸ்' படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் தனக்கு நேர்ந்த பாடி ஷேமிங்கிற்கு எதிராக கௌரி ஜி கிஷன் வெளிப்படையாகப் பேசினார். நடிகையின் எடை மற்றும் உயரம் குறித்து படத்தின் இயக்குநரிடம் கேட்ட யூடியூபருக்கு கௌரி தக்க பதிலடி கொடுத்தார். அந்த யூடியூபரின் கேள்வியும், அதற்கு கௌரி அளித்த பதிலும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. நடிகைக்கு ஆதரவாக நடிகர் கவின், பாடகி சின்மயி ஸ்ரீபதா உட்பட பலர் பதிவிட்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசுகையில், என் உடல் என் விருப்பம். அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று கௌரி கிஷன் தெரிவித்தார். நான் பெண்களுக்காகப் பேசினேன். நாளை மற்றொரு நடிகைக்கு இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று கருதிதான் வெளிப்படையாகப் பேசினேன் என்றும் அவர் கூறி உள்ளார். யூடியூபரிடம் திருப்பிக் கேட்டபோது, அந்த அறையில் இருந்தவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினர்.
கெளரி கிஷன் பதிலடி
என் குழுவில் இருந்த ஒருவர்கூட எதுவும் பேசவில்லை என்றும் கௌரி ஜி கிஷன் கூறுகிறார். இந்த விஷயம் விவாதமான பிறகு, சினிமா துறையில் இருந்து பலரும் ஆதரவளித்ததாகவும், அதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கௌரி ஜி கிஷன் தெரிவித்தார். படம் பற்றியோ அல்லது நான் நடித்த கதாபாத்திரம் பற்றியோ எந்த கேள்வியும் இல்லை. 'அவரைத் தூக்கும்போது என்ன எடை இருந்தது' என்று சிரித்துக்கொண்டே அவர் நடிகரிடம் கேட்டார். 'குட்டையான இவரை ஏன் நடிக்க வைத்தீர்கள்' என்று இயக்குநரிடமும் கேட்டார்.
ஒரு போனை எடுத்துக்கொண்டு வந்தால் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்று யூடியூபர்கள் நினைக்கிறார்கள். பெண்கள் என்றால் மூளை இல்லாதவர்களா... நிறைய திறமையானவர்களும் இருக்கிறார்கள். பெண்களுடம் வெறும் உடம்பு, டிரெஸ், மேக் அப் ஆகியவற்றை பற்றி தான் கேட்க முடியுமா என்ன? படத்தை பார்த்த பின்னர்கூட அவர் இப்படி பேசியது தான் என்னை கோபப்படுத்தியது. அவருக்கு அவ்வளவு ஈகோ இருந்தது என கெளரி கிஷன் கூறி உள்ளார்.
இயக்குநர் மற்றும் நாயகன் மீது விமர்சனம்
செய்தியாளர் சந்திப்பில் நடிகைக்கு ஆதரவளிக்காத இயக்குநர் அபின் ஹரிஹரன் மற்றும் நாயகன் ஆதித்யா மாதவன் ஆகியோர் மீது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பத்திரிகையாளரை சமாதானப்படுத்தவே இயக்குநர் முயன்றார். இதற்கிடையில், விமர்சனங்கள் எழுந்ததையடுத்து ஆதித்யா மாதவன் மன்னிப்பு கேட்டுள்ளார். மௌனம், பாடி ஷேமிங்கிற்கான ஆதரவு அல்ல என்றும், இது தனது அறிமுகப் படம் என்பதால் திகைத்துவிட்டதாகவும் ஆதித்யா மாதவன் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆதரவளித்த பிரபலங்கள்
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. நடிகைக்கு ஆதரவாக நடிகை குஷ்பு சுந்தர், நடிகர் கவின், பாடகி சின்மயி ஸ்ரீபதா உள்ளிட்ட பலர் வந்துள்ளனர். தைரியமாக பதிலளித்ததற்கு வாழ்த்துகள் என்று குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு பெண்ணின் எடை மற்றவர்களின் பிரச்சினை அல்ல. தங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி நடிகைகள் திருப்பிக் கேட்டால் ஆண்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ன நடந்திருக்கும்? என்றும் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். மரியாதை என்பது ஒருவழிப் பாதை அல்ல என்றும் குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார்.