MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Gold Smuggling Case: நடிகை ரன்யா ராவ் ஜாமீன் மனு தள்ளுபடி!

Gold Smuggling Case: நடிகை ரன்யா ராவ் ஜாமீன் மனு தள்ளுபடி!

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க பொருளாதார குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

2 Min read
manimegalai a
Published : Mar 15 2025, 12:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க பொருளாதார குற்றத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ரன்யா ராவ் தாக்கல் செய்த மனுவை நீதிபதி விஸ்வநாத் சி.கவுடர் தள்ளுபடி செய்தார். 
 

24
14 கிலோ தங்கத்தை துபாயில் இருந்து கடத்திய ரன்யா ராவ்

14 கிலோ தங்கத்தை துபாயில் இருந்து கடத்திய ரன்யா ராவ்

குற்றம் சாட்டப்பட்ட ரன்யா 2024-ல் 27 முறை துபாய்க்கு சென்று வந்துள்ளார். அவரிடம் துபாய் குடியிருப்பு அடையாள அட்டையும் உள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் புலனாய்வு அதிகாரிகளிடம் உள்ளன. மனுதாரர் ஈடுபட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத தங்கக் கடத்தலால் ரூ.4.83 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு சர்வதேச அளவில் தங்கம் கடத்தலில் தொடர்புகள் இருப்பது தெரியவந்தது.

Ranya Rao: தங்கம் கடத்தலுக்கு அரசு வாகனத்தை ரன்யா பயன்படுத்தினாரா? சிறை அதிகாரிக்கு எழுதிய கடிதம்!
 

34
ரன்யா ராவ் தரப்பில் இருந்து ஜாமீனுக்காக முன்வைக்கப்பட்ட வாதம்

ரன்யா ராவ் தரப்பில் இருந்து ஜாமீனுக்காக முன்வைக்கப்பட்ட வாதம்

மேலும் விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ள நிலையில், இந்த நேரத்தில் மனுதாரர் ஜாமீன் பெற்று வெளியே வந்தால், சாட்சிகளை அழிக்கவும், வழக்கை திசை திருப்பவும் வாய்ப்புள்ளது. எனவே ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார். ஜாமீன் மனு விசாரணை நடந்தபோது, ரன்யா தரப்பு வழக்கறிஞர், குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யும் போது, எந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறித்து கைது குறிப்பில் புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்றார். கைது செய்தவுடன் சுங்கத்துறையின் அரசிதழ் அதிகாரி அல்லது மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தவில்லை. ரன்யாவை கைது செய்யும் போது சுங்கச் சட்டத்தின் விதிகளையும் பின்பற்றவில்லை. மூன்று குற்றவாளிகளில் ரன்யா மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ரன்யாவின் உடல், ஷூ மற்றும் பாக்கெட்டில் தங்கம் வைத்திருந்ததாக புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், மெட்டல் டிடெக்டரில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. கைது நடவடிக்கையில் டிஆர்ஐ அதிகாரிகள் நிறைய சட்ட மீறல்களை செய்துள்ளனர். மேலும் மனுதாரர் ஒரு பெண் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. 
 

44
டிஐஆர் அதிகாரிகள் தரப்பு வாதம்:

டிஐஆர் அதிகாரிகள் தரப்பு வாதம்:

மேலும் டிஆர்ஐ விசாரணையில், இந்த மனுவை எதிர்த்து டிஐஆர் தரப்பு வழக்கறிஞர், துபாயில் இருந்து 14.200 கிலோ 24 கேரட் தங்கம் கொண்டு வந்தபோது மார்ச் 3-ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் போலீசாரிடம் பிடிபட்டனர். தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும்போது துபாயில் பொய் சொல்லி, அங்கிருந்த அதிகாரிகளை தவறாக வழிநடத்தியுள்ளனர். இது திட்டமிட்ட செயல். மாநில காவல்துறையின் நெறிமுறைகளை தவறாக பயன்படுத்தி ரன்யா தங்கக் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். இது நாட்டுக்கு ஆபத்தான வளர்ச்சி. வழக்கு விசாரணை நிலையில் உள்ளது, தங்கக் கடத்தலில் ஈடுபட்ட மற்றவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். முழு அளவில் முறைகேடுகளை வெளிக்கொண்டு வர வேண்டும். இந்த கட்டத்தில் ரன்யாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று டிஐஆர் அதிகாரிகள் வாதிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Ranya Rao: யூடியூப் பார்த்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டேன் - பகீர் கிளப்பிய ரன்யா ராவ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரன்யா ராவ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth Net Worth : எளிமையின் சிகரம் ரஜினிகாந்த்... யம்மாடியோ இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?
Recommended image2
50 ஆண்டு சாதனை.. பல தலைமுறைகளை கவர்ந்தவர்.. ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Recommended image3
நான் வெறி எடுத்து பாட்டு எழுதிய படம் படையப்பா..! சர்ச்சை கவிஞர் வைரமுத்து அதிர்ச்சி கருத்து
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved