குஷ்பு என்ட்ரியால் கலக்கமான காயத்ரி ரகுராம்... பெரிய பதவிக்காக பழனி முருகனுக்கு பால் காவடி எடுத்து வேண்டுதல்?
நடிகையும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம், தன்னுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என, பழனி முருகனுக்கு பால் காவடி எடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இதோ...
நடிகை குஷ்பு கடந்த இரு தினங்களுக்கு முன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திடீர் என பாஜக கட்சியில் இணைந்தார்.
எப்போதும் ட்விட்டரில் மோதிக்கொள்ளும் காயத்ரி மற்றும் குஷ்பு ஒரே கட்சியில் தற்போது இணைந்துள்ளனர்.
காயத்ரி ரகுராம் தற்போது பாஜகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளர் பதவியை வகித்து வருகிறார்.
இதனையடுத்து பாஜகவில் பெரிய பதவி வேண்டி அவர் பழனி முருகனுக்கு காவடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
பழனி முருகருக்கு இவர் பால் காவடி எடுத்து நடந்து சென்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
குஷ்பு தற்போது பாஜகவில் இணைந்துள்ளதால் அவரை மிஞ்சிய பதவி கிடைக்காவிட்டாலும்... இப்போது வகித்து வரும் பதவியை விட பெரிய பதவி கிடைக்கும் என்கிற வேண்டுதலோடு காயத்ரி பால் காவடி எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் சந்தித்த அவர் ’தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் குஷ்புவை அடுத்து இன்னும் சிலர் பாஜகவில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த குஷ்புவுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் அனேகமாக அவர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
அரசியலில் மாற்றம் ஒன்றே மாறாதது... அதே போல் நினைத்தது எல்லாம் அரசியலில் மட்டும் என்றும் நடந்ததே இல்லை. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.