ஆபாச நடிகை மியா கலிஃபா தற்கொலை?... சோகத்தில் மூழ்கிய ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்த செய்தி...!
ஆபாச பட நடிகையான மியா கலிஃபா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக பரவி வந்த வதந்திக்கு அவரே சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
லெபனான் நாட்டில் பிறந்த மியா கலிஃபா, ஆபாச படங்களில் நடிப்பதன் மூலம் கொடிகட்டி பறந்தவர். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
மியா கலிஃபா இந்த துறையில் நுழைந்த போது அவரை பெரும்பாலானோருக்கு தெரியாது.
ஆனால், 2014-ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர், லெபனான் - அமெரிக்கா குடும்பத்தைச் சேர்ந்த மியா கலிஃபா அவர் பின்பற்றும் மதத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், அவர் நடிக்கும் திரைப்படங்களில் ஹிஜாப் அணிந்து நடிப்பது அவர்களை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது
அந்த ஒரே ஒரு மிரட்டல் மூலம் மியா கலிஃபா உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த சம்பவத்திற்கு பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை மியா கலிஃபா கைவிட்டார்.
உலகளவில் பல லட்சம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை மியா கலிஃபா, தனது நடிப்பு தொழிலை விட்டு, விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி புரிந்து வருகிறார்.
தொழிலை மாற்றினாலும் ரசிகர்களுக்கு கிளுகிளு போஸ்களோடு காட்சியளிப்பதை அவர் நிறுத்தியதே இல்லை. சோசியல் மீடியாவில் கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
2000ம் ஆண்டு லெபனானில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மியா, 2011ம் ஆண்டு தனது பள்ளி காதலனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க் என்பவரை யாருக்கும் சொல்லாமல் எளிமையான முறையில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 20 மில்லியன். டுவிட்டரில் ஃபாலோவர்கள் 3.2 மில்லியன் பேர். இத்தனை சர்ச்சைகள் இத்தனை ரசிகர்கள் இருந்தாலும் கூட ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் இவர் சம்பாதித்தது என்னவோ 8.5 லட்சம்தான்.
எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மியா கலிஃபா, கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கம் காணாமல் போனதால் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரப்பினர்.
இதனால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்களுக்கு தான் மூக்கு அறுவை சிகிச்சை செய்ததால் சோசியல் மீடியாவில் தலைகாட்டவில்லை எனக்கூறி போட்டோவுடன் விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் தன்னை பற்றி பரவி வரும் வதந்திக்கு ட்விட்டரில் “எனது நண்பர்கள் யாரெல்லாம் இன்னும் எனக்கு இரங்கல் பூங்கொத்துகளைக் கொடுக்கவில்லை என்று கவனித்துக் கொண்டே இருக்கிறேன்” என்று வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்