யாஷிகா ஆனந்திற்கு திருமணம் முடிஞ்சாச்சா?.... வைரல் போட்டோஸால் அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
லைட்டாக இடை தெரிய புடவை அணிந்து சிக்கென நிற்கும் யாஷிகாவின் நெற்றி வகிட்டில் இருக்கும் குங்குமம் ரசிகர்களை செம்ம டென்ஷனாக்கி விட்டது.
“இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ என சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
அவ்வப்போது என்றில்லாமல் எப்போதுமே இஷ்டத்துக்கு கவர்ச்சி காட்டும் யாஷிகாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது. ஆனால் பட பூஜையில் அடக்க ஒடுக்கமாக புடவையில் வந்த யாஷிகாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
யாஷிகாவின் கைவசம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘இவன் தான் உத்தமன்’,‘ராஜபீமா’ ஆகிய படங்கள் உள்ளன. தற்போது ‘முத்தின கத்திரிக்கா’ பட புகழ் வெங்கட் ராகவன் இயக்கும் ‘கடமையை செய்’ படத்தில் எஸ்.ஏ.சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. . பூஜையின்போது எஸ்.ஜே. சூர்யா, யாஷிகா ஆனந்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின. அதில் அநியாயத்திற்கு ஒல்லியான யாஷிகா ஆனந்த், புடவையில் குடும்ப குத்துவிளக்காக ஜொலித்தார்.
லைட்டாக இடை தெரிய புடவை அணிந்து சிக்கென நிற்கும் யாஷிகாவின் நெற்றி வகிட்டில் இருக்கும் குங்குமம் ரசிகர்களை செம்ம டென்ஷனாக்கி விட்டது.
நீங்க ஏன் நெற்றில் வகிட்டில் குங்குமம் வைத்திருக்கீங்க?, எங்களுக்கு கூட சொல்லாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டீர்களா? என சகட்டு மேனிக்கு கேள்வி கேட்டு வருகின்றனர். மற்றொருபுறம் கடமையை செய் படத்தில் யாஷிகா எஸ்.ஏ.சூர்யாவின் மனைவி கதாபாத்திரமாக இருக்கலாம் அதனால் வகிட்டில் குங்குமம் வைத்திருப்பார் இதுக்கெல்லாம் ஏன் இவ்வளவு கேள்வி என கருத்து தெரிவித்து வருகின்றனர்.