“அதுக்கு மட்டுமே என்னை கூப்பிடுறாங்க”... அஜித், விஜய் பட நடிகை வேதனை...!
இந்நிலையில் பேட்டி ஒன்றில் சூர்பணகை படம் குறித்து பேசியுள்ள அக்ஷரா கெளடா தனது மனக்குமுறல்களையும் கொட்டி தீர்த்துள்ளார்.
பாடலாசிரியர் சினேகன் நடித்த உயர்திரு 420 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அக்ஷரா கெளடா. பெங்களூருவைச் சேர்ந்த அக்ஷரா அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு திரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ தொற ஆகிய படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் அக்ஷரா கெளடா.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கோலிவுட்டின் டாப் ஸ்டார்களான அஜித், விஜய் பற்றி பேசியது பரபரப்பை கிளப்பியது. அதில் துப்பாக்கி படத்தில் நடித்தது எதிர்பாராதது. அப்போது நான் மும்பையில் இருந்தேன்.அதனால் அந்த படத்தில் நடித்தேன். ஆனால் அந்த படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். ஏனென்றால் முதலில் என்னிடம் காஜல் அகர்வாலுக்கு தோழி என்று தான் சொன்னார்கள். ஆனால் படத்தில் அப்படி இல்லை. இருந்தாலும் அதற்காக நான் கோபப்படவில்லை. துப்பாக்கி படத்தில் எனக்கு நடந்த ஒரு நல்லவிஷயம் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், சந்தோஷ் சிவன் ஆகியோரது அறிமுகம் கிடைத்தது தான் என தெரிவித்தார்.
அதேபோல் நடிகர் அஜித்திற்கு சினிமாவை தாண்டி நிறைய விஷயங்கள் தெரியும். எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். அவரிடமிருந்து லவ் லைஃப் என்பதை கற்றுக்கொண்டேன். அஜித் யாரை முதலில் சந்தித்தாலும் அவர்களுடைய குடும்பத்தினரை பற்றியும் நலம் விசாரிப்பார் என தலயை பற்றி ரொம்பவும் ஒஸ்தியாக பேசியிருந்தார். இது தளபதி ரசிகர்களை சற்றே கடுப்பாக்கியது.
லாக்டவுனுக்கு முன்பு அவர் கார்த்திக் ராஜுவின் இயக்கத்தில் சூர்ப்பணகை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் அக்ஷரா கெளடா, அதிரடி கவர்ச்சி காட்டி வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் சூர்பணகை படம் குறித்து பேசியுள்ள அக்ஷரா கெளடா தனது மனக்குமுறல்களையும் கொட்டி தீர்த்துள்ளார்.
கார்த்திக் ராஜுவின் சூர்ப்பணகை படத்தில் என் கதாபாத்திரத்திற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஷேட் இருக்கிறது. என்னுடைய கதாபாத்திரம் கரண்ட் மற்றும் பீரியட் போர்ஷனில் இரண்டிலும் வரும். ஷூட்டிங்கின் போது நானும் ரெஜினாவும் நல்ல தோழிகளாகிவிட்டோம். நான் பணியாற்றிய கலைஞர்களிலேயே அவர் தான் சிறந்தவர்.
நான் எத்தனை படங்களில் நடித்தாலும் என்னை ஆரம்பம் பட நடிகை அல்லது ஸ்டைலிஷ் தமிழச்சி என்று தான் அனைவரும் அழைக்கிறார்கள். என்னை போன்ற பெண்களை கவர்ச்சியான கதாபாத்திரம் அல்லது ஒரு பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆட மட்டுமே அழைக்கிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார்.
ஆனால் கார்த்திக் ராஜு என் மீது நம்பிக்கை வைத்து நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.