ரோஜா படத்தில் மதுபாலா வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மிஸ் செய்த பைத்தியம் நான்..! குமுறிய நடிகை..!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை, இழந்ததாக பிரபல நடிகை ஒருவர் பேட்டியில் தன்னை தானே பைத்தியம் என்று திட்டிகொண்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில், வெளியான ரோஜா திரைப்படம் தற்போது வரை பலரது ஃபேவரட் திரைப்படங்களில் ஒன்று. குறிப்பாக இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற பாடல்கள் எப்போது கேட்டாலும் சில்லென்ற உணர்வை தரும். இந்தப்படத்தின் வாய்ப்பை கோட்டை விட்டதாக கூறியுள்ளார் பிரபல வாரிசு நடிகை.
இந்த படத்தில், அக்காவை பெண் பார்க்க செல்லும் அரவிந்த் சாமி தங்கை மதுபாலாவை திருமணம் செய்து கொள்வார். மது பாலா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில், பிரபல பழம் பெரும் நடிகையின் மகள் ஐஸ்வர்யாவிற்கு தான் சென்றுள்ளது.
அப்போதைக்கு மற்றொரு முன்னணி நடிகரின் படத்தில் இவர் பிஸியாக நடித்து கொண்டிருந்ததால் இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம்.
பிறகு தான் இந்த படத்தின் வாய்ப்பு, நடிகை மது பாலாவுக்கு செல்ல அவர் நடித்து இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதனை பல முறை அவருடைய அம்மாவிடம் கூட கூறி ஐஸ்வர்யா வருத்தப்பட்டது உண்டாம்.
இதை தொடர்ந்து இவர் பல தமிழ் உள்ளிட்ட பிற மொழி படங்களில் நடித்தாலும் இவரால் ஏனோ, இவர் அம்மாவை போல் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து, ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள நடிகை ஐஸ்வர்யா 'ரோஜா' படத்தின் வாய்ப்பை தவற விட்ட பைத்தியக்காரி நான் என அவரையே அவர் கழுவி ஊற்றி கொண்டுள்ளார்.
தற்போது, தமிழில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும், சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.