'சார்பட்டா பரம்பரை' படத்தின் கதையை நிராகரித்தாரா முன்னணி நடிகர்?
இயக்குனர் பா. ரஞ்சித் குத்து சண்டையை மையமாக வைத்து இயக்கியுள்ள 'சார்பட்டா பரம்பரை' படத்தை முன்னணி நடிகர் உட்பட 6 பேர் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா தன்னுடைய 30 ஆவது படமாக நடித்துள்ள, 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம்... ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்காக ஆர்யா, அதீத உடல் பயிற்சி மேற்கொண்டு... உடலை ஏற்றி ஒரு பாக்ஸராக நடித்துள்ளார். இவர் உடல் பயிற்சி செய்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியது.
இவரை தொடர்ந்து, இந்த படத்தில் நடித்துள்ள ஒட்டுமொத்த படக்குழுவும் இந்த படத்திற்காக பட்ட கஷ்டத்தை... சமீபத்தில் வெளியான ட்ரைலரில் பார்க்க முடிந்தது.
வெற்றிப்படத்தை கொடுக்க போராடி வரும் ஆர்யாவுக்கு இந்த படம் திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது. அதே போல், வேம்புலியாக நடித்துள்ள ஜான் கொகேனுக்கும் இப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுத்திகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், 'சார்பட்டா பரம்பரை' படத்தின் கதையை எழுதிய பின்னர், இந்த படத்திற்காக நடிகர் சூர்யா உட்பட 6 நடிகர்களை அணுகியுள்ளார் பா.ரஞ்சித் அவர்கள் அனைவருமே மற்ற சில படங்களில் பிசியாக இருந்ததாலும், வேறு சில காரணங்களாலும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது.
பின்னர் தான் நடிகர் ஆர்யாவை ரஞ்சித் அணுகியுள்ளார். ஆர்யா இது ஒரு ஸ்போட்ஸ் பிலிம் என்றதுமே, உடனே ஓகே சொன்னது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு ஏற்றாப்போல் உடலை மாற்றி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.