ஷூட்டிங் ஸ்பாட்டில் நுழைந்து ஐஸ்வர்யா ராய்யை அடித்து துன்புறுத்திய நடிகர்..! ஏன் தெரியுமா?
உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்யை பிரபல நடிகர் ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நுழைந்து அடித்து துன்புறுத்திய சம்பவத்தை பற்றி பார்ப்போம்..
இரு பிரபலங்கள் காதலிக்கும் போது, அவர்கள் வாழ்க்கையிலும் ஒன்றாக இணைய வேண்டும் என அதிகம் ஆசை படுவது, அவர்களுடைய ரசிகர்கள் தான். அதே நேரத்தில் திடீர் என இவர்கள் தங்களுடைய காதல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் போதும் அதனை எளிதில் அவர்களுடைய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை.
அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கான் காதல் கதை பாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒன்று.
இவர்கள் காதலித்த போது வந்த செய்திகளை விட பிரிந்த பின்னர் ஏன், பிரிந்தனர் என பெரிய விவாதமாகவே அது மாறியது.
மேலும், இவர்கள் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என ஆசைப்பட்ட ரசிகர்கள் பலரால் அது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாக இருந்தது.
இதுகுறித்து அப்போது பேசிய நடிகை ஐஸ்வர்யா ராய்... சல்மான் கான் அதிகம் குடிப்பதாகவும், தன்னை துஷ்ப்ரயோகம் செய்ததாகவும் கூறினார்.
2000 ஆம் ஆண்டு, ஐஸ்வர்யா ராய்யின் பெற்றோர் சல்மான் கான் மீது போலீசில் புகார் அளித்தனர். அச்சுறுத்தல் மற்றும் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாக கூறினர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு, நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து கொண்டிருந்த படமான Chalte Chalte படப்பிடிப்பின் செட்டுக்கு வந்த நடிகர் சல்மான் கான், நடிகை ஐஸ்வர்யா ராய்யை அடித்து கீழே தள்ளி, படப்பிடிப்பு செட்டை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இந்த படத்தில் இருந்து, நடிகை ஐஸ்வர்யா ராய் நீக்கப்பட்டு அவருக்கு பதில், ராணி முகர்ஜி நடித்தார்.
இந்த சம்பவத்திற்கு பின் மெல்ல மெல்ல இருவருமே தங்களுடைய கடந்த கால வாழ்க்கையில் இருந்து மீண்டு, நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்தார். இதை தொடர்ந்து சல்மான் காணும், Iulia Vantur என்பவருடன் டேட்டிங் சென்றதாகவும் கூறப்படுகிறது.