இன்ஜினியரிங் படித்து விட்டு சினிமாவை தேர்வு செய்த 10 பிரபலங்கள்..! யார் யார் தெரியுமா?
இன்ஜினீரிங் படிப்பை முடித்து விட்டு திரையுலகின் மீது உள்ள ஆர்வத்தால், நடிகராக உருவெடுத்த பிரபலங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் வாங்க...
நடிகர் கார்த்தி:
தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் கார்த்தி, சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்து முடித்த பின், மேல் படிப்பை நியூ யார்க்கில் படித்தார். பின்னர், துணை இயக்குனராக இருந்து... நடிகராக மாறினார்.
ஆர்யா:
நடிகர் ஆர்யா... சென்னை வண்டலூரில் உள்ள தனியார் இன்ஜினீரிங் கல்லூரியில் படித்து விட்டு, பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் நடிக்க துவங்கினார்.
சிவகார்த்திகேயன்:
நடிகர் சிவகார்த்திகேயன், திருச்சியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்து விட்டு, பின் சென்னையில் எம்.பி.ஏ படித்து கொண்டே.. காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமாகி நடிகராக மாறினார்.
டாப்சீ
நடிகை டாப்சீ டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்படித்தவர் . சில வருடம் சாப்ட் வேர் துறையிலும் பணியாற்றி பின், மாடலிங், நடிப்பு என தன்னுடைய கவனத்தில் திரைத்துறையின் பக்கம் திருப்பினார்.
நடிகை கனிகா:
சென்னையில் பள்ளி படிப்பை முடித்த இவர், மெரிட்டில் மெக்கானிகல் இன்ஜினியரிங் சீட் கிடைத்து, தன்னுடைய படிப்பை ராஜஸ்தானில் முடித்தார். பின்னர் டப்பிங், மாடலிங், நடிப்பு என திரைத்துறையில் கவனம் செலுத்த துவங்கினார்.
நடிகை விஜயலக்ஷ்மி:
இயக்குனர் அகத்தியனின் மகளும் நடிகையுமான விஜய லட்சுமி, சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர். நடிப்பில் ஆர்வம் இருந்ததால், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பிரிதிவிராஜ் சுகுமாரன்:
தமிழில் பாரிஜாதம், மொழி, ராவணன், உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் பிரிதிவிராஜ் ஆஸ்திரேலியாவில் தன்னுடைய இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு பின்னர் நடிகராக மாறினார்.
பிரசன்னா:
நடிகர் பிரசன்னா, திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் EEE படிப்பை முடித்தவர். பின்னர் அசட்டு தைரியத்தில் 5 ஸ்டார் படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்டு, அதில் செலக்ட் ஆனதால் நடிகராக மாறினார்.
கதிர்:
நடிகர் கதிர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தவர், பின்னர் நடிப்பதில் அதிக ஆர்வம் இருந்ததால், நடிகராக மாறினார்.
பிரியா பவானி ஷங்கர்:
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் BE எலக்ட்ரானிக்ஸ் படித்த இவர், பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரை நாயகி, வெள்ளித்திரை நாயகி என முன்னேறிக்கொண்டே உள்ளார்.