‘இனி அஜித், விஜய் எல்லாம் காலி’... சிம்பு களத்தில் இறங்கி கலக்கப்போறார்... புகழ்ந்து தள்ளிய சுசீந்திரன்...!
சிம்புவை வச்சி தான் என்னால் இவ்வளவு சீக்கிரம் படத்தை முடிக்க முடிந்தது. வேற ஏதாவது ஹீரோவை வைத்திருந்தால் 52 நாள் ஆகியிருக்கும்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. இன்று சென்னை எக்மோரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்ற இயக்குநர் சுசீந்திரன் பேசியது சிம்பு ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. ஆரம்பம் முதலே சுசீந்திரன் சிம்புவை புகழ்ந்து தள்ள ஆரம்பித்தார்.
எங்களை விட ரசிகர்களான உங்களுக்கு தான் அவரைப் பற்றி நிறைய பேசினார். என்னிடம் சிம்பு மிகவும் உருக்கமாக ஒரு விஷயத்தை சொன்னார்... “இவ்வளவு அன்பு வைத்திருப்பவர்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை” என உருகினார்.
எல்லாரும் முடிச்சிடுச்சுன்னு நினைச்சாங்க... ஆனால் ஈஸ்வரன் படத்தில் இருந்து சிம்புவிற்கான நேரம் ஆரம்பிச்சாச்சு. இனி ஓட்டுமொத்த இந்தியாவிலேயே சிறந்த நடிகர் என்ற பெயருடன் வலம் வருவார் என புகழ்ந்து தள்ளினார்.
சிம்புவை வச்சி 30 நாளில் ஷூட்டிங் முடிக்கப்போறீங்களா? என கிண்டல் பண்ணாங்க. ஆனால் சிம்பு சொன்னார் நீங்க எவன் சொல்றதையும் கேட்காதீங்க... நம்ம சொன்ன தேதியில் ஷூட்டிங் போறோம்ன்னு சொன்னார். அதே மாதிரி வந்து நின்னார்.
சிம்புவை வச்சி தான் என்னால் இவ்வளவு சீக்கிரம் படத்தை முடிக்க முடிந்தது. வேற ஏதாவது ஹீரோவை வைத்திருந்தால் 52 நாள் ஆகியிருக்கும். சிங்கிள் டேக்கில் வேலை பார்த்தார். நான் பார்த்த ஹீரோக்களை எல்லாம் விட சூப்பராக நடித்தார். சரியாக சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்து நிற்பார்.