‘ஆசை’ படத்தில் அஜித்திற்கு பதிலாக நடிக்கவிருந்தது இவர் தானாம்?... நல்ல வாய்ப்பை இப்படி நழுவவிட்டுட்டாரே...!
தல அஜித் நடித்த ஆசை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆனதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில் ஆசை திரைப்படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் இதோ...
மணி ரத்னம், ஸ்ரீராம் தயாரிப்பில் வசந்த் இயக்கிய திரைப்படம் ஆசை. 1995ம் ஆண்டு வெளியான இந்ததிரைப்படம் தல அஜித்தின் கேரியரிலேயே முக்கியமான படமாக அமைந்தது.
இந்த படத்திற்கு முன்னதாக அஜித் அமராவது, பாச மலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என 4 படங்கள் வெளிவந்த போதும் அவை எதுவும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை.
ஆசை படம் ஹீரோ, ஹீரோயின், வில்லன் ஆகிய 3 கதாபாத்திரங்களை முக்கியமானதாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும், இந்த மூன்று கேரக்டருக்கும் புதுமுகங்களை தேர்வு செய்ய வேண்டுமென வசந்த் முடிவு செய்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் அந்த சமயத்தில் டூயட் படத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது வசந்திடம் கே.பாலச்சந்தர் தான் பிரகாஷ் ராஜை அறிமுகம் செய்து அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என பரிந்துரைத்துள்ளார். ஷூட்டிங்கில் பிரகாஷ் ராஜின் நடிப்பு வசந்திற்கு பிடித்து போக அவரும் ஓ.கே.சொல்லியுள்ளார்.
ராமர் போன்ற கதாபாத்திரங்களைக் கொண்ட அழகான நடிகர் வேண்டும் என்பதால் முதலில் சூர்யாவை தான் வசந்த் அணுகியுள்ளார். சூர்யா அப்போது முதலில் நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்ததால், வேறு ஒரு நடிகரை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
அதையடுத்து ஹீரோ கதாபாத்திரத்திற்கு அரவிந்த் சாமியைப் போல் இன்னொரு அழகான புதுமுக ஹீரோவை தேடி இருக்கிறார். அப்போது தான் அஜித், வசந்திடம் கதை கேட்க சென்றுள்ளார். அஜித் இதற்கு முன்னதாக படங்களில் நடித்தது எல்லாம் வசந்திற்கு தெரியாது. ஆனால் அவர் நடித்த வேஷ்டி விளம்பரம் ஒன்றை தூர்தர்ஷனில் பார்த்து தான் அஜித்தை தேர்வு செய்துள்ளார்.
முதல் மீட்டிங்கிலேயே அஜித் குமார் தான் இந்த படத்தில் நடிக்கிறார் என்று முடிவெடுத்து விட்டாராம். அஜித்தின் அழகை வர்ணிப்பதற்காகவே அந்த படத்தில் இன்ட்ரோ சீனிலேயே 3 பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள கேட்பது போல் காட்சி வைத்திருப்பார்.
கடைசியாக இன்னொசென்டான அழகிய முகம் வேண்டும் என்பதற்காகவே சுவலட்சுமியை தேடி பிடித்து ஆசை படத்தில் நடிக்க வைத்துள்ளார்