குருநாதர் ஷங்கருடன் போட்டி போடும் அட்லி... ஒவ்வொரு படத்திற்கும் எவ்வளவு கோடிசம்பளம் வாங்கியிருக்கார் தெரியுமா?
இயக்குநர் அட்லி தனது 4 படங்களுக்கு வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் பழைய படங்களை காப்பியடிக்கிறார். காட்சிகளை எல்லாம் ஹாலிவுட் படத்தில் இருந்து சுடுகிறார். குருநாதர் ஷங்கர் போல் ஒரு படத்தில் கூட உண்மையான கதை இல்லை என பலரும் இயக்குநர் அட்லியை விமர்சிப்பது உண்டு.
என்ன தான் காப்பி பெஸ்ட் இயக்குநர் என ரசிகர்கள் கிண்டலடித்தாலும் தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து முன்னணி இயக்குநர்கள் இடத்திற்கு இடம் பிடித்துவிட்டார் அட்லி. தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குருநாதர் போல் பிரம்மாண்ட கதை, வித்தியாசமான கதைக்களம் என தெறிக்கவிடாவிட்டாலும் அட்லி இயக்கும் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். அப்படிப்பட்ட அட்லியின் சம்பளம் குறித்து வெளியாகியுள்ள அசத்தல் தகவல்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
மணி ரத்னத்தின் மெளன ராகம் படத்தின் மார்டன் வெர்ஷன் என அனைவரும் கமெண்ட் செய்த ராஜா ராணி திரைப்படம் தான் அட்லியின் முதல் படம். ஆர்யா, சத்யராஜ், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர படங்கள் நடித்த இந்த படத்திற்கு அட்லி வாங்கிய சம்பளம் ரூ.10 லட்சம் தானாம்.
தளபதியை மிடுக்கான போலீஸ் அதிகாரியாக பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையை ஏற்கனவே ‘தெறி’ படம் மூலம் நிறைவேற்றிய அட்லி, தனது இரண்டாவது படமான இதற்கு வாங்கிய சம்பளம் ரூ.4 கோடியாம்.
தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லி - விஜய் கூட்டணியில் அடுத்து வெளியான திரைப்படம் மெர்சல். இதற்கு அட்லிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 12 கோடி ரூபாய் எனக்கூறப்படுகிறது.
கடைசியும் விஜய் - அட்லி மெகா கூட்டணியில் வெளியான பிகில் திரைப்படம். வசூல் ரீதியாக 300 கோடியை தாண்டிய இந்த சூப்பர் ஹிட் படத்திற்கு ரூ.18 கோடியை அட்லி சம்பளமாக வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து அட்லி இயக்க உள்ள படத்திற்கு ரூ.35 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.