சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!
சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் வெள்ளித்திரையில் சாதிக்க முடியாது என்பதை மாற்றி எழுதியுள்ளா நம்ம வாணி போஜன். ரசிகர்களால் சின்னத்திரை நயன்தாரா என அன்புடன் அழைக்கப்படும் வாணிபோஜனின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் திடீரென வைரலாகி வருகிறது.
மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன்
அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.
தனது அழகால் மட்டுமல்ல அசத்திய நடிப்பாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த வாணிபோஜனை சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்கள் தலைமேல் வைத்து கொண்டாடுகின்றனர்.
வாணி போஜன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள போட்டோ ஒன்றை ஜூம் செய்து அவருடைய கழுத்துக்கு பின்புறம் அழகான மச்சம் ஒன்று இருப்பதை நெட்டிசன்கள் கண்டறிந்துள்ளனர். அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.