காஜல் அகர்வால் கல்யாண கேக்கில் மறைந்திருக்கும் ரகசியம்... அவ்வளவு எளிதா யாருமே செய்ய முடியாத விஷயம்...!
காஜல் அகர்வால் திருமண கேக்கில் மறைந்திருக்கும் சுவையான ரகசியம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தற்போதைய சோசியல் மீடியா ட்ரெண்டிங் என்றால் அது பிரபல நடிகை காஜல் அகர்வாலின் கல்யாணம் தான். காதலர் கெளதம் கிட்சிலுவை கரம் பிடித்த காஜல் திருமண வாழ்க்கையை செமையாக என்ஜாய் செய்து வருகிறார்.
மும்பையில் புது வீட்டில் கணவருடன் குடிபுகுந்த காஜல் அகர்வால், மாலத்தீவில் லட்சங்களை கொட்டி தேனிலவையும் கொண்டாட்டமாக முடித்துவிட்டார்.
ஹனிமூன் போன இடத்திலும் சும்மா இல்லாமல் கணவரையே போட்டோகிராப்பராக மாற்றி குட்டை டவுசர் முதல் பிகினி உடை விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராமையே சூடேற்றிவிட்டார்.
சமீபத்தில் காஜல் அகர்வால் ரிசப்ஷன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. அதில் கையில் சரக்கு கிளாஸ் உடன் முகமும் மனமும் புன்னகை பொங்க காதல் தம்பதி மகிழ்ச்சியில் திளைத்தனர்.
அதில் அனைவரையும் கவர்ந்தது காஜல் அகர்வால் திருமண கேக் போட்டோ வைரலானது. இரண்டு அடுக்குகள் கொண்டதாக இருந்த கேக்கில் இருந்த மலர்களை அப்படியே உண்ணலாம்.
அந்த கேக்கில் அடுத்து மறைத்திருக்கும் ரகசியம் என்னவென்றால் குரோக்கம்பூச் என்ற இனிப்பு வகை அதில் அடுக்கி வைத்திருப்பது தான்.
.
பிரெஞ்சு இனிப்பு வகையான இதனை சர்வ சாதாரணமாக அனைவராலும் செய்ய முடியாதாம்.ம் அதற்காக ஸ்பெஷல் சமையற்கலைஞர்களை வைத்து தான் இதை செய்ய முடியுமாம்.
காஜல் அகர்வாலுக்கும், கெளதம் கிட்சிலுவுக்கும் பிடித்த இந்த குரோக்கம்பூச் இனிப்பை திருமண கேக்கில் அலங்காரத்திற்காக வைத்துள்ளனர்.