தென்னிந்தியாவையே திகைக்க வைத்த தனுஷ்... ரசிகர்களிடம் பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி...!
தற்போது தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த மகிழ்ச்சியான விஷயமும் இன்று நடந்துவிட்டது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் "மாரி 2". இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான "ரவுடி பேபி" பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.
நடனப்புயல் பிரபு தேவா நடன பயிற்சியில் தனுஷ், சாய் பல்லவி போட்ட துள்ளல் ஆட்டம் பட்டி, தொட்டி முதல் அனைவரையும் ஈர்த்தது. இசை, நடனம், செட் அமைப்பு என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி பாடிய இந்த பாடலை யூ-டியூப் மூலமாக இதுவரை இந்த மாதத்தின் தொடக்கத்தில் தான் 990 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்திருந்தனர். இதனால் தென்னிந்திய மொழிகளிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற ஒரே பாடல் என்ற சாதனையையும் ரவுடி பேபி பாடல் செய்திருந்தது.
தற்போது தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த மகிழ்ச்சியான விஷயமும் இன்று நடந்துவிட்டது. அதாவது ரவுடி பேபி பாடல் 100 கோடி பார்வையாளர்களை கடந்த முதல் தென்னிந்திய பாடல் வீடியோ என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். “கொலவெறி டி பாடலின் 9வது ஆண்டு நாளில் ரவுடி பேபிக்கு 1 பில்லியன் வியூஸ் கிடைத்துள்ளது. 1 பில்லியன் வியூஸ் பெற்ற முதல் தென்னிந்திய பாடல் என்பது கவுரவம். எங்களின் மொத்தக் குழுவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
அதேபோல் ஓவர் நைட்டில் ஒரே பாடலில் பேமஸ் ஆன குஷியில் சாய் பல்லவியும் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
ரவுடி பேபி செய்த சாதனையை பார்த்த ரசிகர்கள் தனுஷ், சாய் பல்லவி, பிரபுதேவா, யுவனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.