இது சரிப்பட்டு வராது... கிருத்திகா உதயநிதி படத்திற்கு குட்பை சொன்ன அஸ்வின்! இது தான் காரணமா..?
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர், கிருத்திகா உதயநிதி இயக்க உள்ள திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆன அஸ்வின் தற்போது அந்த படத்தில் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான அனைத்து பிரபலங்களுக்கும், படவாய்ப்புகள் கிடைத்து விட்ட நிலையில் அஸ்வினுக்கு மட்டும் பல நாட்கள் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
ஏற்கனவே அவர் 'ஓ காதல் கண்மணி', 'ஆதித்ய வர்மா' போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவாக அறிமுகமாக வேண்டும் என்பதே அவரது கனவு. ஆனால் அதற்கான வாய்ப்புகள் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி ஃபைனலுக்கு பின்பு தான் கிடைத்தது.
ஏற்கனவே அவர் 'ஓ காதல் கண்மணி', 'ஆதித்ய வர்மா' போன்ற படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவாக அறிமுகமாக வேண்டும் என்பதே அவரது கனவு. ஆனால் அதற்கான வாய்ப்புகள் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி ஃபைனலுக்கு பின்பு தான் கிடைத்தது.
இதுகுறித்து அஸ்வின் வெளியிட்டுள்ள தகவலில், திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவே தான் முயற்சி செய்து வருவதாகவும், இயக்குனர் கிருத்திகா உதயநிதி, வெப் சீரிஸ் போல் இயக்க உள்ளதால் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இதை தவிர்த்து, அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் படம் ஒன்றிலும் அஸ்வின் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
எனினும் கிருத்திகா உதயநிதி படத்தில் இருந்து, அஸ்வின் விலகிது வருத்தம் என்றாலும், உங்களுக்கு பிடித்தது போல் மட்டுமே கதைகளை தேர்வு செய்து நடியுங்கள் என அஸ்வின் ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.