250 படங்களுக்குப் பிறகு அடித்த ஜாக்பாட்... முதன் முறையாக ஹீரோவாகும் காமெடி நடிகர் செந்தில்...!
சுமார் 250 படங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த செந்திலுக்கு தற்போது ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தற்போது தமிழ் சினிமாவை வடிவேலு, விவேக், சூரி, யோகிபாபு, சந்தானம் என எத்தனையோ காமெடி நடிகர்கள் கலக்கினாலும் என்றுமே காமெடி ஜாம்பவான்கள் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள் என்றால் அது கவுண்டமனி - செந்தில் மட்டுமே.
80, 90களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி கூட்டணியாக கவுண்டமனி - செந்தில் கூட்டணி அமைந்தது. குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடியை இன்று பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்காதவர்களே கிடையாது.
அப்படி கிட்டதட்ட 15 வருடங்கள் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த வெற்றி கூட்டணியில், கவுண்டமனி சில படங்களில் ஹீரோவாக கூட நடித்திருக்கிறார். ஆனால் செந்திலுக்கு அப்படியொரு வாய்ப்பு அமையவே இல்லை.
சுமார் 250 படங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த செந்திலுக்கு தற்போது ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் அடுத்த படத்தில் நடிகர் செந்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் செந்திலுக்கு ஜோடி இல்லை என்றும் கூறப்படுகிறது.