தவறை உணர்ந்த பாலாஜி..! ஷாக் கொடுத்த போட்டியாளர்கள்.. விறுவிறுப்பாக கேப்டன்சி டாஸ்க்..!
இந்த வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க்கில் சோம், பாலாஜி மற்றும் சம்யுக்தா ஆகிய மூவர் கலந்து கொண்டிருந்த நிலையில் சோம் ஜெயிக்க கூடாது என்று அவருக்கு எதிராக செயல்பட்டு சம்யுக்தாவை ஜெயிக்க வைத்தார் பாலாஜி.
இதுகுறித்து கமலஹாசன் கேள்வி எழுப்பிய போது கூட அவர் இந்த வீட்டில் பப்பெட் பொம்மை போல் செயல் படுவதாக தெரிவித்தார்.
இதனை பிக்பாஸ் வீட்டில் இருந்த பலரும், அவரது பேச்சை கடுமையாக எதிர்த்தனர். இதனால் ஆரி உள்பட பலரிடம் இருந்து கடுமையான விமர்சனத்தையும் பாலாஜி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
ஒருகட்டத்தில் பாலாஜிக்கே, சம்யுக்தாவை கேப்டன் ஆக்கியது தவறோ என்ற எண்ணமும் வந்துவிட்டது.
இந்த நிலையில் இன்று ’இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்கள் யார்? என்ற பிக்பாஸ் கேள்விக்கு அர்ச்சனா, நிஷா, உள்பட பலர் சோமுவை தேர்வு செய்த நிலையில் பாலாஜியும் சோம் பெயரை குறிப்பிட்டார்.
மேலும் தன்னால் தான் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்பதையும் அவர் வருத்தத்துடன் தெரிவித்து தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சோம் பெயரை நாமினேட் செய்கிறார்.
இதுகுறித்து சம்யுக்தா பாலாஜியிடம் கேட்டபோது, ‘நான் தான் அனைவராலும் கார்னர் செய்யப்பட்டிருக்கின்றேன்’ என்று பதில் கூறியுள்ளார்.
அதேபோல் சிறப்பாக செயல்பட்ட இன்னொருவர் என ஆரியை சக போட்டியாளர்கள் தேர்வு செய்தனர். ஆரியை சிறப்பாக செயல்பட்டவர் என சனம்ஷெட்டி, அனிதா, ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆஜித் ஆகியோர் தேர்வு செய்தனர்.
எனவே அடுத்த வார பிக்பாஸ் தலைவராக, ஆரி அல்லது சோம் வருவதற்கே நிறைய வாய்ப்புகள் உள்ளது என்பது தெரிகிறது