விஜே சித்ரா தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... முதல்வர் வரை சென்ற விவகாரம்... தாயாரின் திடீர் கோரிக்கை!
First Published Dec 30, 2020, 2:16 PM IST
வழக்கு விசாரணை நிறைவு பெற்று போலீசாரிடம் அறிக்கை சமர்ப்பிக்க தயாராக இருந்த நிலையில், சித்ராவின் தாயார் முதல்வர் வரை கொடுத்துள்ள மனு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட விஜே சித்ரா, கடந்த 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஹேம்நாத்திற்கும், சித்ராவிற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடத்திருந்ததால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?