அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? விசாரணையில் வெளிவந்த தகவல்!
கடந்த வருடம், அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது போல்... நேற்று அஜித் வீட்டுக்கு திடீர் என வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது போலீசார் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை கண்டு பிடித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஜூன் 18ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக 108 ஆம்புலன்ஸ் எண்ணிற்கு அழைத்து மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட, மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் ரஜினி வீட்டை சோதனையிட்டனர். அதன் பின்னர் அந்த போன் கால் வதந்தி என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மர்ம நபர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், எச்சரித்து அனுப்பினர்.
இதே போலவே கடந்த ஆண்டு ஜூலை 4ம் தேதி அன்று தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு, இணைப்பை துண்டித்துள்ளார்.
உடனடியாக மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டை சல்லடை போட்டு சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பின்னர் அந்த போன் கால் வதந்தி என்பது கண்டறியப்பட்டது.
இதை தொடர்ந்து, தல அஜித் வீட்டிற்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதமே, வெடிகுண்டு உள்ளதாக போன் செய்த மர்ம நபர், அழைப்பை உடனடியாக துண்டித்து விட்டார்.எனவே போலீசாரும் அடித்து பிடித்து கொண்டு, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு சென்று சோதனையிட்ட போது, அங்கு வெடிகுண்டு போல் எந்த பொருளும் கிடைக்கவில்லை. எனவே அது வதந்தி என தெரியவந்தது.
இப்படி அடுத்தடுத்து, பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய தினம் திடீர் என அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும், சில நிமிடங்களில் சுக்கு நூறாக வெடிக்க போகிறது என்பது போன்று... மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார்.
police