விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக 'பிகில்' படம் திரையரங்கில் வெளியாகிறதா? குஷியில் ரசிகர்கள்!
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்காக 'பிகில்' திரைப்படம் திரையிட உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.
கடந்த மூன்று மாதத்திற்க்கு மேலாக, கொரனோ வைரஸ் அச்சுறுத்தலால் அணைத்து திரையரங்குகளும் மூடியே உள்ளது.
இதனால், ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த 'மாஸ்டர்' படம் இன்னும் வெளியாகவில்லை. கொரோனா பிரச்சனை அதிகரித்து வருவதால், திரையரங்கம் திறக்க பட்ட பிறகே இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஒருவேளை தீபாவளிக்கு இந்த படம் ரிலீசாகும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்ததாக கூறப்பட்டது.
நாள் தற்போது கொரோனா பிரச்சனை தமிழகத்தில், தலைவிரித்தாடுவதால், தன்னுடைய ரசிகர்கள் அணைத்து கொண்டாட்டங்களை தவிர்க்கும் படி சமீபத்தில் விஜய் ரசிகர் மன்ற தலைவர் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியானது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி ஜூன் 22ஆம் தேதி முதல் ஜுன் 30 ஆம் தேதி வரை விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’பிகில்’ படத்தை திரையிட அந்நாட்டு விஜய் ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர்.
அந்த வகையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் அரசின் சிறப்பு அனுமதியை பெற்று அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு அந்நாட்டின் திரையரங்குகளில் ‘பிகில்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவல் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.