பிரமாண்டமாக நடந்து முடிந்த ஆரவ் - ராஹே திருமணம்..! நேரில் வாழ்த்திய பிக்பாஸ் பிரபலங்கள்..!
பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆறவிற்கு இன்று பிரமாண்டமாக திருமணம் நடந்து முடித்துள்ளது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இவரை வாழ்த்தியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் டிஆர்பி-க்கு முக்கியமாக உதவிய சமாச்சாரம் என்றால் அது ஆரவ் - ஓவியா காதல் விவகாரம் தான். ஓவியா இவரை காதலித்ததாலேயே இவருக்கு இந்த நிகழ்ச்சியில் முக்கியத்துவம் கிடைத்தது.
பட்டி, தொட்டி எல்லாம் இளசுகளின் மனதை கவர்ந்த ஓவியா, ஆரவ்வை காதலிப்பதாக அறிவித்தார். ஆனால் ஆரவ் அதற்கு பிடிகொடுக்கவில்லை.
இதனால் ஓவியா அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற ஆரவ் கடைசி வரை சென்று டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.
மாடலிங் துறையில் கலக்கி வந்த ஆரவ் தற்போது சினிமாவில் ஹீரோவாக அசத்தி வருகிறார். ’ராஜபீமா’, ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியோடு ஆரவ், ஓவியா காதல் முறிந்துவிட்டதாக ரசிகர்கள் நினைத்த நிலையில், இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றிய புகைப்படங்களை தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வந்தனர்.
இருவரும் லிவிங் டுகெதராக வாழ்வதாக வதந்தி பரப்பட்ட நிலையில், தனது நண்பர் என்றும், தனக்கு பெரிதாக திருமணத்தில் நம்பிக்கை கிடையாது என்றும் ஓபனாக பதிலளித்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஓவியா.
இந்நிலையில் ஆரவ்விற்கும் ராஹே என்ற நடிகைக்கும் இன்று (செப்டம்பர் 6ம் தேதி ) திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியது .
அதன்படி இவர்களுடைய திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடித்துள்ளது. இதில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய காயத்ரி ரகுராம், ஆர்த்தி, சினேகன், சுஜா வருணி உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
ஆரவ் திருமணம் செய்துகொண்டுள்ள நடிகை ராஹே கெளதம் மேனன் இயக்கிய ஜோஷ்வா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய திருமணத்தில் நடிகை ஓவியா கலந்து கொண்டது போல் தெரியவில்லை.