BiggBoss Tamil 5: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு குட்பை சொல்ல போவது இவர்தானா? வெளியான பரபரப்பு தகவல்!
கடந்த வாரம் பிக்பாஸ் (Biggboss Tamil 5) வீட்டை விட்டு, அபிநய் (Abinay) அல்லது நிரூப் (Niroop) வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், இமான் அண்ணாச்சி (iman Annaachi) வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதை தொடர்ந்து, இந்த வாரம் வெளியேற உள்ள பிரபலம் யார்? என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம், யாருமே சற்றும் எதிர்பாராத போட்டியாளர்களின் ஒருவரான இமான் அண்ணாச்சி வெளியேறினார். இவரை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று வழக்கம் போல் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை கூற துவங்கி விட்டனர்.
இந்த வாரம் நாமினேஷன் படலம் சற்று வித்தியாசமானதாகவே இருந்தது. அதாவது நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் அதில் இருந்து தப்பிப்பதற்காக வாய்ப்பையும் பிக்பாஸ் அமைத்து கொடுத்தார்.
அந்த வகையில், இந்த வாரம் முழுவதும் நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றவர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் கூறியிருந்தார்.
அந்த வகையில் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்த, சிபி (Ciby), நிரூப், சஞ்சீவ் (Sanjeev), தாமரை (Thamarai), அமீர் (Ameer) ஆகியோர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அபினய் (Abinay), பிரியங்கா (Priyanka), பாவனி (Pavani), வருண் (varun), அக்ஷரா (Akshara) மற்றும் ராஜூ (Raju) ஆகிய 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்தார்.
இந்நிலையில் இந்த வாரம் யார் குறைந்த வாக்குகளுடன் வெளியேறுவார் என்கிற ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த வாரம் மிக குறைந்த வாக்குகளுடன் வெளியேறும் பெயர் பட்டியலில் வருண் மற்றும் அபிநய் ஆகியோர் இருந்தனர்.
இவர்களில் ஒவ்வொரு வாரமும், எலிமினேஷனில் இறுதி வரை வந்து, தப்பிப்பதை வழக்கமாக வைத்திருந்த அபிநய் தான் இந்த வாரம் வெளியேற உள்ளார் என கூறப்படுகிறது.
கடந்த முறை நெட்டிசன்கள் கணிப்பு தவறினாலும், இந்த வாரம் கன கச்சிதமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் மன்னனின் பேரன் பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் சர்ச்சையில் அரசல் புரசலாக சிக்கியது குறிப்பிடத்தக்கது.