பிக்பாஸ் வீட்டில் முதல் வயல் கார்டாக நுழைந்த போட்டியாளர்..! யார் தெரியுமா?
ஏற்கனவே பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் இன்றைய தினம் புதிய போட்டியாளர் என்ட்ரி கொடுப்பதை, இன்றய முதல் புரோமோ மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்களை வெளியேற்றிய பின்பு தான், வயல் கார்டு போட்டியாளர் என்ட்ரி கொடுப்பார்கள்.
ஆனால் இந்த முறை, அடுத்த வாரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற உள்ள நிலையில், புதிய போட்டியாளர் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து செம்ம ஷாக் கொடுத்துள்ளார்.
புதிய போட்டியாளர் வருகைக்கு முன் பாடல் ஒளிபரப்பட்டதும், அனைவரும் யாரோ ஒருவர் வீட்டுக்குள் வருவதை கண்டுபிடித்துவிட்டனர்.
அவசர அவசரமாக வெளியே வந்த போட்டியாளர்கள் முன் செம்ம மாஸ்ஸாக என்ட்ரி கொடுத்தார் தொகுப்பாளர் அர்ச்சனா.
அவரை பார்த்ததும் அணைத்து போட்டியாளர்களும் கட்டி அணைத்து அவரை வரவேற்றனர்.
அர்ச்சனா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியே கலகலப்பாக இருக்கும் என்ற நிலையில் தற்போது அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.