வெளியேறிய பின் ஒன்று கூடிய பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள்..! வைரலாகும் புகைப்படம்..!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் கடந்த வாரம், ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா என இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட்டனர்.
இப்படி எலிமினேட் செய்யப்பட்ட பின், முதல் முறையாக பிக்பாஸ் சீசன் போட்டியாளர்கள் நான்கு பேர் ஒன்று கூடி எடுத்து கொண்ட புகைப்படத்தை பாடகர் வேல்முருகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
யார்... யார் என்றே இதற்கு முன் தெரியாத பிரபலங்கள் ஒன்று கூடி ஒரே வீட்டில் இருப்பதே மிகப்பெரிய சவால், இதை தைரியமாக எதிர்கொண்டு உள்ளே செல்லும் போட்டியாளர்கள், சக போட்டியாளரிடமும் நல்ல பெயரை எடுக்க வேண்டும் அதே நேரத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்து அவர்களது உள்ளத்திலும் இடம் பெற வேண்டும்.
இல்லையென்றால் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு, மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகளை பெரும் பட்சத்தில் அவர் எலிமினேட் செய்யப்படுவார்.
அனைவரும் வெற்றிபெற வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தாலும் ஒருவர் மட்டுமே வெற்றிபெறுவார் என்பது நாம் அறிந்தது தான்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் முதல் முறையாக சுரேஷ், வேல்முருகன், சம்யுக்தா, ரேகா ஆகியோர் சந்தித்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்களை வேல்முருகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
விரைவில் மற்ற போட்டியாளர்களும் ஒன்று கூடி, விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.