MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மனைவியை அடித்து கொடுமை படுத்திய பிக்பாஸ் அபிஷேக்..! முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட தீபா..!

மனைவியை அடித்து கொடுமை படுத்திய பிக்பாஸ் அபிஷேக்..! முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட தீபா..!

பிக்பாஸ் சீசன் 5 (Biggboss Seasson 5 Tamil) நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு விளையாடி வரும் அபிஷேக் ராஜா (Abishek Raja) அவரது மனைவியை அடித்து கொடுமை செய்ததால் தான், இருவருக்குள்ளும் விவாகரத்து நடந்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது, அவரது மனைவி தீபா (Deepa) கொடுத்துள்ள பேட்டி மூலம் தெரிய வந்துள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Oct 16 2021, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

கடந்த இரண்டு வாரங்களாகவே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதை, மற்றும் சோக கதைகளையும், தங்களுடைய துறையில் வளர எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம், ஏன் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளோம் என்பது குறித்து தெரிவித்து வருகிறார்கள்.

 

28

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாக விளையாடி வருபவர் அபிஷேக் ராஜா. இவர் தன்னுடைய அம்மா, அப்பா பற்றி பேசிய அளவிற்கு தன்னுடைய விவாகரத்து குறித்து அதிகம் பேசவில்லை.

 

38

திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் ஒரு தவறான ஆளாக இல்லாமல் இருந்திருப்பேன் என்றும், என் அப்பாவை காப்பாற்றி இருப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

 

48

இந்நிலையில், இவரது மனைவி தீபா சாமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், கணவன் மனைவியை, அடிப்பது கொடுமை படுத்துவது போன்ற சமூக அக்கறை கொண்ட விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

 

 

58

அதில் ஒரு கணவன் மனைவியை அடிப்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. குழந்தைகள் முன் கணவன் மனைவியை அடிப்பதால், அந்த குழந்தையும் அது சாதாரண ஒன்று என்று நினைத்து நாளை தன்னுடைய மனைவியை தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவர அடிப்பதை கையாளலாம். ஆனால் இது மிகவும் தவறான ஒன்று.

 

 

68

என்னுடைய வாழ்க்கையில் இப்படி நடந்த போது, பலர் இந்த காலத்தில் கூட இப்படி நடக்கிறதா என கேட்டனர். என தன்னுடைய கணவனான அடித்து கொடுமை படுத்தியதால் தான் தனக்கு விவாகரத்து நடந்தது என்பது குறித்தும் தீபா பேசியுள்ளார்.

 

 

78

அதே போல் ஒரு முறை கணவன் தன்னுடைய மனைவியை அடித்து விட்டு மன்னிப்பு கேட்டால் கூட, மீண்டும் ஏதாவது பிரச்சனை வரும் போது அடிப்பர் எனவே முதல் முறை இப்படி செய்யும் போதே... அதனை அலட்சியமாக எடுத்து கொள்ள கூடாது என கூறியுள்ளார். தற்போது இவர் கொடுத்துள்ள பேட்டி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

88

அதே நேரம், அபிஷேக் ஏன்? தன்னுடைய விவாகரத்து குறித்து முழுமையாக பேசவில்லை என்றும் பலர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved