சனம் ஷெட்டிக்கு ரகசிய திருமணம் நடந்தாச்சா?... ரசிகரின் கேள்விக்கு அவரே சொன்ன கலக்கல் பதில்...!
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி, அதில் இருந்து வெளியே வந்த பிறகும் சரி சனம் ஷெட்டி எப்போது எல்லாம் புடவை கட்டினாலும் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
2020ம் ஆண்டின் தொடக்கத்தையே கலகலக்க வைத்தார் சனம் ஷெட்டி. பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த தர்ஷனை காதலித்து வந்தார்.
இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் வரை நடந்த நிலையில், இடையில் சனம் ஷெட்டியை திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என அடம்பிடித்தார் தர்ஷன். காரணம் சனம் ஷெட்டி பிகினி போட்டோ ஷூட் நடத்தியதும், வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அதேபோல் தன் மூலமாக தான் தர்ஷனுக்கு பிக்பாஸ் 3-ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அவருக்காக 15 லட்சம் ரூபாய் வரை பணத்தை செலவு செய்த தன்னை மனம் மற்றும் உடல் ரீதியாக தர்ஷன் துன்புறுத்தியதாகவும் சனம் ஷெட்டி அதிரடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
தர்ஷன் மீது சனம் அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் பிக் பாஸ் தர்ஷன் மீது 294(பி)- ஆபாசமாக பேசுதல், 506-மிரட்டல், 420- மோசடி, 354- பெண்ணை மானபங்கப்படுத்துதல் என நான்கு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த சர்ச்சையை அடுத்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் சனம் தர்ஷனை பற்றி பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள், ஆனால் அவர் எப்படி எதுவும் செய்யவில்லை. சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஏற்பட்ட மோதலை தவிர மத்தபடி நல்ல பிள்ளையாகவே நடந்து கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சரி, அதில் இருந்து வெளியே வந்த பிறகும் சரி சனம் ஷெட்டி எப்போது எல்லாம் புடவை கட்டினாலும் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில், சனம் ஷெட்டி யாருக்கும் சொல்லாமல் ரகசிய திருமணம் செய்து கொண்டாரோ? என பேச்சு கிளப்பியது. இதை ரசிகர் ஒருவர் சனத்திடம் கேட்டே விட்டார்.
அதற்கு பதிலளித்துள்ள சனம் ஷெட்டி, பலர் இதே கேள்வியைக் கேட்கிறார்கள். எனக்கு திருமணம் ஆகவில்லை. உங்களுடைய ஆசிர்வாதத்துடன் ஒரு நாள் நடக்கலாம். என் வீட்டில் திருமணமான பெண்கள் தான் நெற்றி வகிடில் குங்குமம் வைக்க வேண்டும் என்றில்லை என தெளிவாக பதிலளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.