கலகலன்னு இருந்த பாலாஜிக்கு இப்படியொரு இழப்பா?... அப்பா மறைவிற்கு பிக்பாஸ் பிரபலங்கள் இரங்கல்...!
இதையடுத்து தந்தையின் இறுதிச்சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத பாலாஜியின் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்தது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரன்னராக தேர்வு செய்யப்பட்டார் பாலாஜி முருகதாஸ். மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா, மிஸ்டர் பர்ஃபெக்ட் பாடி டைட்டில்கள் வென்ற பாலாஜி முருகதாஸ் சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னணி மாடலாக வலம் வந்த இவர், சினிமாத்துறையில் கால் பதிப்பதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அனிதாவின் தந்தை உடல் நலக்குறைவால் காலமானார். அப்பாவை காண வேண்டும் என்ற ஆவலுடன் வீட்டிற்கு திரும்பிய அனிதாவிற்கு ஏமாற்றத்துடன் மீளா துயரமும் கிடைத்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையடுத்து சோசியல் மீடியாவில் தங்களுடைய இரங்கலை பதிவு செய்த பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களான நிஷா, சுரேஷ் சக்கரவர்த்தி, ரேகா, அர்ச்சனா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த சோகத்தில் இருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரது மனதை கவர்ந்த பாலாஜி முருகதாஸின் தந்தை நேற்று மரணமடைந்தார். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு தாயை பறிகொடுத்த பாலாஜி தற்போது தந்தையையும் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமையல் கலைஞராக இருந்த பிக்பாஸ் பாலாஜியின் அப்பா கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அதே பிரச்சனையால் அவர் மரணமடைந்தது உறுதியானது. இதையடுத்து தந்தையின் இறுதிச்சடங்கில் கண்ணீர் விட்டு கதறி அழுத பாலாஜியின் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை கலங்க வைத்தது.
பிக்பாஸ் பாலாஜியின் தந்தை மறைவிற்கு நடிகரும், பிக்பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி இரங்கல் தெரிவித்துள்ளார். “பாலாஜி முருகதாஸ் தந்தையின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல். இந்த கடினமான நேரத்தில் அந்த குடும்பத்திற்கு பலமும், தைரியமும் உடன் இருக்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி, “பெற்றோரை இழப்பது மிகப்பெரிய இழப்பு. சிலர் தனியாக துக்கப்படுவதை விரும்புகிறார்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு அந்த இடத்தை கொடுக்க வேண்டும். பாலாவுக்கு மனமார்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.