சித்ராவின் மரணம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி... பிக்பாஸ் அனிதா சம்பத்தின் பதில் என்ன தெரியுமா?
அப்பாவின் மறைவிற்கு பிறகு தற்போது சோசியல் மீடியா பக்கம் வந்துள்ள அனிதா சம்பத், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
பிரபல தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருக்கும் போதே தனது அழகாலும், அழகிய தமிழ் உச்சரிப்பாலும் ரசிகர்களின் ம்னம் கவர்ந்தவர் அனிதா சம்பத். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் பங்கேற்ற போது அனிதாவிற்கு இருந்த ரசிகர்கள் பட்டாளம். அதிகம் பேசுகிறார், கோபப்படுகிறார், ஸ்ட்ராங்காக இல்லாமல் பொசுக்கென அழுதுவிடுகிறார் போன்ற விமர்சனங்கள் மூலமாக ஹேட்டர்களாக மாறினர்.
இருவாரத்திற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதா சம்பத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய தந்தை ஆர்.சி.சம்பத் வயது மூப்பு, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
அப்பாவின் மறைவிற்கு பிறகு தற்போது சோசியல் மீடியா பக்கம் வந்துள்ள அனிதா சம்பத், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அப்படி சித்ராவின் மரணம் குறித்து ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
வீட்டுக்கு வந்தவுடன் அந்த செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன் . அவரை நேரில் பார்த்தது இல்லை ஆனால் அவருடைய இறப்பு பற்றி கேட்டதும் மிகவும் மனம் உடைந்து போனேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.