மறுபடியும் அர்ச்சனாவுக்கு ஆப்பு வைத்த சுசித்ரா... பிக்பாஸிடம் போட்டுடைத்த உண்மை...!
தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற்றுள்ளது. அதில் சக போட்டியாளர்களில் பாதி பேர் ஆரியையும், பாதி பேர் அர்ச்சனாவையும் கூறியுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக நடிகை ரேகா வெளியேறினார். அவருக்கு பதிலாக வைல்ட் கார்டு மூலமாக பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார் விஜே அர்ச்சனா.
வந்த முதல் நாளே ஆளுக்கு ஒரு பட்டப்பெயரை கழுத்தில் மாட்டிவிட்டு ஆட்டத்தை ஆரம்பித்தார் அர்ச்சனா. அன்றிலிருந்து இன்று வரை அர்ச்சனாவின் குரல் தான் அந்த வீட்டிற்குள் ஓங்கி ஒலிக்கிறது.
இது பார்வையாளர்களை செம்ம கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. எல்லா இடத்திலும் ஓவராக டாமினேட் செய்கிறார், தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார், குரூப்பிசம் என பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது எழுந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரண்டாவது போட்டியாளராக வேல்முருகன் வெளியேற, வைல்ட் கார்டு ரவுண்ட் மூலம் உள்ளே வந்தார் பாடகி சுசித்ரா
வந்த முதல் நாளிலேயே நீங்க மறுபடியும் தீயா விளையாடணும் என சுரேஷுக்கும், “எதுக்கெடுத்தாலும் அடுத்தவங்கள வாயை மூட சொல்லுற... நீங்க முதலில் வாயை மூடுங்க” என்பது போன்ற இமோஜியை அர்ச்சனாவுக்கும் கொடுத்தார்.
அதை வாங்கும்போதே கடுப்பான அர்ச்சனா ‘புரிஞ்சிடுஞ்சி’ என சிடுசிடுத்தபடியே தான் போய் உட்கார்ந்தார்.
தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற்றுள்ளது. அதில் சக போட்டியாளர்களில் பாதி பேர் ஆரியையும், பாதி பேர் அர்ச்சனாவையும் கூறியுள்ளனர். அதனால் இந்த வார எலிமினேஷன் பட்டியலில் ஆரி, அர்ச்சனா இடம் பிடித்துள்ளனர்.
அந்த வீடியோவில் கன்பெஷன் ரூமுக்குள் நுழைந்த சுசித்ரா அர்ச்சனாவை நாமினேட் செய்கிறார். எனக்கு அவங்களோட டாமினேட்டிங் ஆக்ட்டிடு (dominating attitude) பிடிக்கவில்லை என நெத்திப்பொட்டில் அடித்தது போல் சொல்கிறார்.