25 வருடத்திற்கு முன்... குலுமணாலியில், விஜய்யுடன் நடித்த போது நடந்த சம்பவத்தை முதல் முறையாக கூறிய நடிகை வனிதா!
பிக்பாஸ் வனிதாவுக்கு இன்னும் 5 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது. தன்னுடைய இரு மகள்களின் சம்மதத்தோடு, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமண வேலைகளில் பிசியாக இருக்கும் போதிலும், தற்போது விஜய்க்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிரபல நட்சத்திர தம்பதிகளின் மகளான, நடிகை வனிதா விஜயகுமார் தான் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமான 'சந்திரலேகா' படத்தில் நிகழ்த்த சுவாரஸ்யமான தகவலை கூறி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதாவது இந்த படத்தின் இடம்பெற்ற 'அரும்பும் தளிரே' பாடல் "25 ஆண்டுகளுக்கு முன்பு குலுமணாலியில், படமாக்கப்பட்ட போது தான் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய 21 ஆவது பிறந்தநாளை கொடாடியதாகவும், அந்த நினைவுகள் தன்னுடைய மனதில் இன்றும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த நினைவுகள் தனக்கு விலைமதிப்பு இல்லாதவை என்றும் நீங்கள் எப்போதுமே எனக்கு சூப்பர் ஸ்டார்தான்" என்று விஜய்க்கு தன்னுடைய 46 வது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கடந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரீ-என்ட்ரி கொடுத்ததன் மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸ்ஸை துவங்கியுள்ள வனிதா, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தன்னுடைய சமையல் திறமையை வெளிக்காட்டி டைட்டில் வின்னராகவும் மாறினார்.
மேலும் தன்னுடைய குழந்தைகளுடன் பாலிவுட், ஹாலிவுட், திரையுலகில் பணியாற்றி வரும்... பீட்டர் பால் என்பவரை மனதுக்கு பிடித்து விட்டதால், அவரை திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டார்.
இவர்களுடைய திருமணம், எளிமையான முறையில் வீட்டிலேயே நடைபெற உள்ளது. தன்னுடைய அம்மாவின் திருமணத்திற்கு, வனிதாவின் இரு மகள்களும் பூரண சம்மதம் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவருடைய திருமணத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இவர் தளபதி விஜய் குறித்து சுவாரஸ்யமான தகவலை கூறி வாழ்த்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.