பாவாடை, தாவணியில் சும்மா நச்சுன்னு இருக்கும் லாஸ்லியா... வைரலாகும் இலங்கை பெண்ணின் மனதை மயக்கும் அழகு...!
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார். அந்த நிகழ்ச்சியில் கவின் - லாஸ்லியா இடையே மலர்ந்த காதல் என்ன ஆனது என யாருக்கும் இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் சோசியல் மீடியாவில் தினமும் விதவிதமான போட்டோஸை தட்டிவிடும் லாஸ்லியா, இன்று பதிவிட்டுள்ள புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.
உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் ஒருவராக விளையாடியவர் இலங்கை பெண்ணான லாஸ்லியா. இவருக்கு நிகழ்ச்சி ஆரம்பமான போதே, முதல் முதலில் இவருக்கு தான் தமிழ் ரசிகர்கள் ஆர்மி துவங்கி கொண்டாடினர்.
இவர் வெற்றி பெரும் அணைத்து வாய்ப்புகளும் இருந்தும், ஒரு சில காரணத்தால் கடைசி 20 நாட்களில், மக்கள் மனதில் சிறு வெறுப்பு தட்டியதால் வெற்றிபெறும் வாய்ப்பு இவரது கையை விட்டு நழுவியது.
எனினும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பைனல் வரை வந்து வெளியேறினார். இவர் வெளியேறியதில் இருந்து லாஸ்லியாவின் ரசிகர்கள், எப்போது அவரை மீண்டும் வெள்ளித்திரையில் பார்க்கப்போகிறோம் என்று காத்திருக்கின்றனர்.
தன்னுடைய ரசிகர்கள் பட்டாளத்தை மகிழ்ச்சியாக்கும் வகையில், நடிகர் ஆரியுடன் ஒரு படத்திலும், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் ஒரு படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இவ்வளவு ஏன் பிரபல நாளிதழில், மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட போது கூட லாஸ்லியாவிற்கு இரண்டாவது இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு ஏன் பிரபல நாளிதழில், மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட போது கூட லாஸ்லியாவிற்கு இரண்டாவது இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இவர் நடித்து வந்த படங்களின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தன்னுடைய சொந்த ஊரான இலங்கையில் குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை போக்கி வருகிறார் லாஸ்லியா.
அங்கிருந்த படி தமிழ் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக தனது போட்டோஸை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது உடல் எடையை எல்லாம் குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள, இலங்கை அழகியான லாஸ்லியா பாவாடை தாவணியில் ஒய்யாரமாக கொடுத்து போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.