Bhavatharini Raja: பவதாரிணி உடல் அஞ்சலிக்காக எங்கு வைக்கப்பட உள்ளது? இறுதி சடங்கு குறித்து வெளியான தகவல்..!
பவதாரிணி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக எங்கு வைக்கப்பட உள்ளது எங்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Singer bhavatharini
இசைஞானி இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி, கல்லீரல் புற்று நோய் காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில், இவருடைய இறுதி சடங்கு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Bhavatharini Songs
இசையமைப்பாளர் இளையராஜா ஜீவா ராஜய்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரண்டு மகன்களும், பவதாரிணி என்கிற ஒரே ஒரு மகளும் உள்ளனர்.
இலங்கையில் இருந்து பவதாரிணி உடல் சென்னைக்கு எப்போது வருகிறது? வெளியான தகவல்..!
மகன்களுக்கு இசை குறித்த ஞானத்தை ஊட்டி வளர்த்தது போல், தன்னுடைய மகளுக்கும் இளையராஜா சிறு வயதில் இருந்தே இசையையும், பாடல்களையும் கற்பித்தார். பவதாரணியை சிறு வயதிலேயே தான் இசையமைத்த 'மை டியர் குட்டிச்சாத்தான்' என்கிற மலையாள படத்திலும் பாடகியாக அறிமுகம் செய்தார் இளையாராஜா. பின்னர் பவதாரிணி படித்து முடிந்தபின்னர் பல படங்களில் பின்னணி பாடல் பாட துவங்கினார். அதே போல் சிறந்த பாடகிக்கான தேசிய விருது இவருக்கு 'பாரதி' படத்தில் இவர் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்கு வழங்கப்பட்டது.
பின்னணி பாடகி என்பதை தாண்டி, 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தமிழில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் இல்லாமல் எடுக்கப்பட்ட 'இலக்கம்' என்னும் படத்தில் இசையமைத்ததற்காக அப்போதைய மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இவரை நேரில் சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.
47 வயதாகும் பாவதாரிணிக்கு, சமீபத்தில் தான் கல்லீரல் புற்றுநோய் 4-ஆவது ஸ்டேஜில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இயற்க்கை முறையில் சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் இருந்து இலங்கை சென்றார். ஆனால் சிகிச்சை துவங்குவதற்கு முன்பே மூச்சு திணறல் ஏற்பட்டு பவதாரிணி உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.
இவருடைய உடல் இன்று மாலை இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டு வர இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், பவதாரிணியின் உடல் பொதுமக்கள், பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலிக்காக இன்று மாலை 6 மணிக்கு, முருகேசன் தெரு தி நகரில் உள்ள.. இசையமைப்பாளர் இளையராஜா வீட்டில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும். கூட்டத்தை தவிர்க்க போலீஸ் ஏற்பாடு செய்ய பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பவதாரிணியில் இறுதி சடங்கு நாளை காலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.