'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் முல்லையாக மாறப்போவது இவரா..? மீனா கொடுத்த தகவல்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும், பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு தனி மதிப்பு உண்டு. சண்டை சச்சரவு, வில்லி, போலீஸ், ஓவர் அழுகை, என இல்லாமல் இருப்பதே இந்த சீரியலின் சிறப்பு.
இந்த சீரியலில் 'முல்லை' என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த, நடிகை விஜே சித்ரா, டிசம்பர் 9 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவரது கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்கிற மிகப்பெரும் கேள்வி ரசிகர்கள் மனதில் உள்ளது.
சமீபத்தில், முல்லை கதாபாத்திரத்தில், நடிகை சரண்யாதான் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதனை சரண்யா மறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ரசிகர்களோ, முல்லை என்கிற கதாபாத்திரத்தை... சித்ராவை தவிர யாராலும் ஈடு செய்ய முடியாது என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
எனினும் இவரது கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்தே ஆகவேண்டும் என்கிற சூழலும் உள்ளது.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், பாரதி கண்ணம்மா சீரியலில்... அறிவுமணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா தான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் நடித்து வரும் ஹீரோயினிகளில் ஒருவரான மீனா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில், ஊடகம் ஒன்றின் லிங்கை வைத்துள்ளார். அதிலும் காவியா தான் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மனதை அழகாலும், சிரிப்பாலும் வசீகரித்த முல்லையாக, மாறி யார் மனம் வீச போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.